உடம்பில் நடுக்கம் உண்டாகும். பயங்கொள்வான், மயிர்க்கூச்சல் உண்டாகும். தலைவலி, கண்கள், வாய் இவற்றில் கருநிறம், வாயில் நீர் ஊறல், இரைப்பு , தேக இளைப்பு, வாயில் துவர்ப்புச் சுவை, உடம்பில் வலி முதலிய குறிகள் கண்டால் அது வாத சுரமாகும்.
Top bar Ad
18/1/19
வாத சுரம்
17/1/19
சுர நிதானம்
தேகத்தில் சாப்பிட்ட உணவு சீரணமாகாமல் ஆமதோஷமாகி வயிற்றிலுள்ள ஜடராக்னியை வெளியே வீசச் செய்யும். அப்போது தொட்டால் சுரம் காயும். மேலும் கோபத்தினாலும், வெயிலில் நடப்பதாலும், படுத்திருப்பதாலும், பசித்த போது சாப்பிடாமலிருப்பதாலும், அதிகமாகத் தலையில் சுமையைத் தூக்குவதாலும், புகையிலையைப் போடுவதாலும், மலச்சிக்கலாலும் சுரநோய் உண்டாகும். நீடித்த மலச்சிக்கல் பழயமுது சாப்பிடுதல், ஆகாரம் சரியாக இல்லாமலிருத்தல், அதிகமான வருத்தம், தூங்காமலிருப்பது, தண்ணீரில் அதிகமாகக் குளிப்பது, பாரத்தைச் சுமப்பது இவைகளாலும் ஜ்வரம் ஏற்படும்.
16/1/19
அபின்யாசன் குணம்
வாதம், பித்தம், கபம் முதலான 28 தோஷங்களும் பிரகோபிக்கும். தூக்கம் அதிகமாகும். மூச்சுவிடுதல் மிக பயங்கரமாயிருக்கும். பசி இராது. இவை அபின்யாச சந்நியின் குறிகள்.
15/1/19
சீதாங்க சந்தி குணம்
தேகம் பனிக்கட்டியைப்போல் சில்லிட்டுப்போம். பசியேற்படாது. வாந்தி அதிகரிக்கும். தாகம், விக்கல், கழிச்சல், கபம், அரிப்பு மேல்மூச்சு, நடுக்கம், குளிர் முதலான பற்பல குறிகளும் காணும். இது சதோங்கச் சந்நியாகும்.