Top bar Ad

21/2/20

ஓம் நம சிவாய சித்தர் பாடல் மருந்தீஸ்வரர் ஆலயம்


ஓம் நம சிவாய

சித்தர் பாடல்!
மருந்தீஸ்வரர் கோவிலில் பாடப்படும் “ஓம் நம சிவாய” சித்தர் பாடல்!
திருவான்மியூரில் அமைந்துள்ள மருந்தீஸ்வரர் ஆலயத்தில் சித்தரால் சிவன் சன்னதி முன் அமர்ந்து தினமும் இரவு பாடப்பட்ட பாடலை இன்றும் சிவ பக்தர்கள் கடைபிடித்து பாடி வருகிறார்கள்! அனைவரின் குரலும் சற்றும் பிறழாது பக்தியுடன் ஓங்கி ஒலிப்பது கேட்கும் நமக்கும் அவர்களுடன் சேர்ந்து பாட வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது!

பாடல் வரிகள் :

ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்காள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துக் கொண்டபின் என்னிலே இருந்த ஒன்றை யான் கானவல்லரோ என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டனே
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம் ஈனதேது ராம ராம ராம ராம வென்ற நாமமே
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
அஞ்சேழுத்திலே பிறந்து அஞ்சேழுத்திலே வளர்ந்து அஞ்சேழுத்தை ஓதுகின்ற பஞ்ச பூத பாவிகாள் அஞ்சேழுத்திலோர் எழுத்து அறிந்து கூற வல்லீறேல் அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூலமானமுழு எடுத்த பாதம் நீள் முடி எண்திசைக்கும் அப்புறம் உடல் கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றைமேவி நின்றதல்ல மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல அரியதாகி நின்ற நேர்மை யாவர்காண வல்லரோ
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
மண்கலங் கவிழ்ந்த போது வைத்து அடுக்குவார் வெண்கலங் கவிழ்ந்த போது வேணுமென்று பேணுவார் நண்கலங் கவிழ்ந்த போது நாறுமென்று போடுவார் எண்கலந்து நின்றமாயம் என்ன மாய மீசனே
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஆனவஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆனவஞ் செழுத்துளே ஆதியான மூவரும் ஆனவஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும் ஆனவஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய

மருந்தீஸ்வரர் ஆலயம்

மருந்தீஸ்வரர் ஆலயம் திருவான்மியூர்

சென்னைப் பெருநகரின் தென் கடைசிப் பகுதி. திருவான்மியூர்ப் பேருந்து நிலையத்தில் அருகில் இக்கோயில் உள்ளது. சென்னை திருவான்மியூரில் அழகுற அமைந்துள்ள புராதனமான ஆலயம் மருந்தீஸ்வரர் திருத்தலம். புராணப் பெருமை கொண்ட பூமி இது.

சோழர் கால கல்வெட்டுகள் 16 உள்ளது. இதில் ஏழு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. சிறந்த மேதையாக விளங்கிய அப்பைய தீக்ஷதிர் சென்னைக்கு அருகில் உள்ள வேளச்சேரியில் வாழ்ந்து வந்தபோது நாடொறும் வான்மியூர் வந்து பெருமானை வழிபட்டு வந்தார். ஒருமுறை இறைவனருளால் இப்பகுதி முழுவதும் நீர்ப்பிரளயமாக மாற அப்பைய் பிரார்த்தித்தார். அவர் பிரார்த்தனையை ஏற்று அவருக்காக இறைவன் மேற்கு நோக்கித் திரும்பிக் காட்சியளித்தார். இச்சிறப்பினால் சுவாமி சந்நிதி மேற்கு நோக்கியுள்ளது. அகத்தியருக்கு, (வைத்திய) மூலிகைகளைப் பற்றி இறைவன் உபதேசித்தருளிய சிறப்புத் தலம். இதனால் இறைவனுக்கு ஓளஷதீஸ்வரர் - மருந்தீசர் என்று பெயர். பசு (காமதேனு) பால் சொரிந்து வழிபட்டமை தொடர்பாகச் சிவலிங்கத் திருமேனியில் சிரசிலும், மார்பிலும் பசுவின்குளம்பு வடு தெரிகின்றது. இதனால் இறைவனுக்கு பால் வண்ணநாதர் என்று பெயர். வேதங்கள் வழிபட்ட தலம். தேவர்களும், சூரியனும் பிருங்கி முதலியோரும் வழிபட்டு இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர்.
  • இறைவன் - ஒளஷதீஸ்வரர், மருந்தீசர், பால்வண்ணநாதர், வேதபுரீஸ்வரர்.
  • இறைவி - திரிபுரசுந்தரி, சொக்கநாயகி, சுந்தரநாயகி.
  • தீர்த்தம் - பஞ்ச தீர்த்தங்கள்

  • கோயிலுக்கு எதிரில் இடப்பால் ஒரு தீர்த்தக்குளம் உள்ளது. அண்மையில் வலப்பால் உள்ள குளம் பயனற்றுள்ளது.
  • தலமரம் - வன்னி.
சம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடல் பெற்றது.
கரையுலாங் கடலிற் பொலிசங்கம் வெள்ளிப்பிவன் திரையுலாங்கழி மீனுகளுந் திருவான்மியூர் உரையுலாம் பொருளாயுலகாளுடையீர் சொலீர் வரையுலா மடமாது உடனாகிய மாண்பதே".
(சம்பந்தர்)
விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர் அண்ட நாயகன் தன்னடி சூழ்மின்கள் பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும் வண்டு சேர்பொழில் வான்மியூர் ஈசனே."
(அப்பர்)
கார்த்திரண்டு வாவுகின்ற சோலைவளர் வான்மியூர்த் தலத்தின் மேவுகின்ற ஞான விதரணமே.'
(அருட்பா)

கிழக்குக் கோபுரமே பிரதான வாயில். கிழக்கு, மேற்குக் கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டுப் பொலிவுடன் விளங்குகின்றன. அழகிய சுற்றுமதில். வான்மீகி முனிவருக்கு இறைவன் நடனக் காட்சியருளிய தலம். காமதேனு பால் சொரிந்து வழிபட்ட சிறப்புடையது. கோயிலில் வான்மீகி முனிவர் திருமேனி உள்ளது. மேலைக்கோபுர வாயிலுள்ள சாலை வழியே சிறிது தூரம் சென்றால் வான்மீகிநாதர் கோயில் உள்ளது.

கிழக்குக் கோபுரம் ராஜகோபுரம். ஐந்து நிலைகளையுடையது. வெளியில் பதினாறு கால் மண்டபம் உள்ளது. இக்கோபுரம் புதுப்பிக்கப்பட்டு 12-2-1984-ல் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சம்பந்தரின் சிவிகையை அப்பா தாங்குவது, ஊர்த்துவ தாண்டவம், தில்லைக்காளி, கஜசம்ஹாரமூர்த்தி முதலியவை குறிப்பிடத் தக்கவை.
கோபுரவாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. முகப்பில் கமல விநாயகர் தரிசனம். பக்கத்தில் அழகிய விஜயகணபதி ஆலயம் உள்ளது. இக்கோயிலின் மேற்புற வரிசையில் சோடச கணபதி உருவங்கள் காட்சியளிக்கின்றன. இக்கோயில் கும்பாபிஷேகம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களால் 17-3-1985-ல் நிகழ்த்தப்பெற்றது.

தற்போது இந்த ஆண்டு 05-02-2020 ஆம் நாள் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வடக்கில் அம்பாள் சந்நிதி உள்ளது - தெற்கு நோக்கியது. இக்கோயிலில்

  1. பிரதோஷ உற்சவம்
  2. முருகனுக்கு விழா
  3. துவஜாரோகண விழா
  4. வன்மீக நடன உற்சவம்
ஆகியவைகளை நடத்துவதற்காக எழுதி வைத்துள்ள கல்வெட்டுக்கள் உள்ளன.

அம்பாள் நின்ற திருக்கோலம். உள்ளே வலம் வரலாம். பள்ளியறை உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களில்லை. சுக்கிரவார அம்மன் திருமேனி தனியே உள்ளது. கருவறையில் வெளிப் பகுதியில் நிரம்பக் கல்வெட்டுக்கள் உள்ளன. பிராகாரக் கல் தூண்களில் நர்த்தன விநாயகர், ரிஷபாரூடர் சிற்பங்கள் உள்ளன.

வெளிப் பிராகாரத்தில் வலமாக வரும்போது, நான்குகால் மண்டபம் உள்ளது. அடுத்து, சற்து நால்வர், கஜலட்சுமி, முத்துக்குமாரசாமி சந்நிதிகள் உள்ளன. முத்துக்குமாரசுவாமி சந்நிதியில் அருணகிரிநாதரும் உள்ளார். மூலவர் - மேற்கு நோக்கிய சந்நிதி, கோமுகம் மாறியுள்ளது. சுயம்பு, பால்போன்று வெண்மையாக உள்ளது. சுவாமிக்கு மேலே விதானம் உள்ளது. முகப்பில் துவார பாலகர்கள் உள்ளனர் - சுவாமிக்கு பால் அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது. பஞ்சாமிர்தம் முதலான பிற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே செய்யப்படுகின்றன. உள் பிராகாரத்தில் ஏராளமன சிவலிங்கங்கள், வைக்கப்பட்டுள்ளன. காலபைரவர் பஞ்சலிங்கங்கள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாக, தட்சிணாமூர்த்தி, விநாயகர், மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. விநாயகர் சந்நிதி மூன்று மூலத் திருமேனிகளுடன் காட்சி தருகிறது. வலப்பால் தியாகராஜா சபா மண்டபம் உள்ளது. மண்டபம் பெரியது. தியாகராஜா சந்நிதி கிழக்கு நோக்கியது. அழகான திருமேனி. தரிசித்துத் தெற்குப்பக்க வாயில் வழியாக உள் சென்றால் நேரே அம்பலவாணர் தரிசனம், மாணிக்கவாசகர் சிவகாமி உருவத் திருமேனிகள் உள்ளன. அம்பலவாணர் உருவம் அழகானது. வன்மீகநாதர் கோயிலுக்குரிய சிறிய நடராஜ உருவம் பாதுகாப்புக்காக இச்சந்நிதியில் வைக்கப் பட்டுள்ளது. வலமாக வரும்போது அறுபத்து மூவர் சந்நிதிகள், அடுத்து விநாயகர் சந்நிதிகள் உள்ளன. இச்சந்நிதியில் இருபுறங்களிலும் நாகலிங்கப் பிரதிஷ்டையுள்ளது. 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும், இக்கோயிலுள் வில்வ மரங்கள் அதிகம் உள்ளன. பங்குனி உத்திரத்தில் பெருவிழா நடைபெறுகிறது. சூரியன் இத்தலத்தில் பெருமானை அர்த்தசாமத்தில் வழிபட்டதாக வரலாறு உள்ளதால் பெருவிழாவில் கொடியேற்றம் அர்த்தசாமத்தில்தான் நடைபெறுகிறது. (கிருத்திகை, பௌர்ணமி முதலிய விசேஷங்களும் இராக்கொண்டு வருவதே இக்கோயிலில் கடைப்பிடிக்கப்படுகின்றது. பங்குனி பௌர்ணமியில்தான் வான்மீகி முனிவர் வழிபட்டு முத்தி பெற்றதாகச் சொல்லப்படுகிறது) . விழாக்காலங்களில் சுவாமி புறப்பாடு காலை மாலைகளில் சந்திரசேகரும் பஞ்சமூர்த்திகளும் மட்டுமே, 'தியாகராஜா' புறப்பாடு பகலில் கிடையாது. இரவில் மட்டுமே நிகழ்கிறது. ஆடி தை மாதங்களில் திருவிளக்கு வழிபாடு சிறப்பாக நடைபெறுகின்றது. பங்குனிப் பெருவிழாவில் மூன்றாம், நான்காம் நாள் உற்சவம் - பவனி உற்சவம் சிறப்பாகச் சொல்ல சொல்லப்படுகிறது. ஓன்பதாம் நாள் விழாவில் வன்னி மரச் சேவை விசேஷம். பத்தாம் நாளில்தான் வான்மீகி முனிவருக்குத் தியாகராஜா, திருக்கல்யாண நடனத்தைக் காட்டியருளம் ஐதீகம் விசேஷமாக நடைபெறுகிறது. பதினோராம் நாளில் நடைபெறும் வெள்ளியங்கிரி விமான சேவை காணத்தக்கது.

சென்னையில் திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயில் நிறைய பேருக்குத் தெரியும். ஆனால் அங்கே மருந்தீஸ்வரர் கோயிலுக்கு அருகில், சாலைக்கு நடுவில் சிறியதாகக் கோயில் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

பலர் இதை பிள்ளையார் கோயில் என்றே எண்ணியிருப்பார்கள். வான்மீகி முனிவருக்குத் தனிக்கோவில் உள்ளது. வால்மீகி

ஆதி காலத்தில், வன்னி மரமும் வில்வ மரமும் சூழ்ந்து, வனமாக இருந்த இந்த இடத்தில் பிறகு கோயில் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். அப்படி வனமாக இருந்த போது, இங்கே வந்த வால்மீகி முனிவர், சிவபெருமானை நினைத்து இங்கு பல காலம் தவமிருந்தார். அந்தத் தவத்தில் மகிழ்ந்த ஈசன், பார்வதிதேவியுடன் ரிஷபாரூடராகக் காட்சி தந்து அருளினார்.

ஆகவே, மருந்தீஸ்வரர் கோயிலுக்கு எதிரில், சாலைக்கு நடுவே, அப்போது அவர் தவம் இருந்த இடத்தில், சந்நிதி கொண்டிருக்கிறார் வால்மீகி முனிவர். தினமும் காலையும் மாலையும் இவருக்கு பூஜைகள் வழிபாடுகள் நடைபெறுகின்றன. வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அவருக்கு வெண்மை நிற மலர்கள் அணிவித்து பிரார்த்தித்தால் கல்வி கேள்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்!

கோயில் நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றது. திருவான்மியூரில்தான் பாம்பன் சுவாமிகளின் சமாதி உள்ளது.

ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்காள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே
ஓம் நமசிவாய

12/7/19

சித்த மருந்தியலின் பிரிவுகள்

சித்தமருந்தியலின் பிரிவுகள்
பொருளடக்கம்
  1. குண பாடம்
  2. மருந்தியக்கம்
  3. மருந்தடையும் மாற்றம்
  4. சாரக மருந்தியல்
  5. மருந்துச் சிகிச்சை
  6. நஞ்சியல்
  7. மருந்களவையியல்
  8. அவுடக பாகவியல் மருந்காக்கவியல்
  9. காய கல்பம்
  10. அதிகாரபூர்வ மருந்துக் குறிப்பேடு

குண பாடம்


இது மருந்து மூலப் பொருட்களின் இருக்கை மற்றும் விவரணம் தயாரிப்பு என்பவற்றுடன் தொடர்புடையது. ஆரம்பத்தில் குணபாடமே மருந்தியலின் மூலாதரமாக விளங்கியது. இதிலிருந்தே நவீன மருந்தியல் 1950 களில் விருத்தியடைந்தது எனலாம். சித்த மருந்தியல் அதன் தோற்ற நிலையில் தான் தற்போதும் உள்ளது என்று கருத வேண்டியுள்ளது.

மருந்தியக்கம்


அதாவது மருந்து உடலில் என்ன செய்கிறது என்பது பற்றிய விபரங்களை அறிவதாகும். அதாவது, மருந்தானது உடலிலுள்ள வாத, பித்த, கபம் மற்றும் சப்த தாதுக்கள் முதலியவற்றில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுடன் தொடர்பானது. இன்னொரு விதத்தில் சொல்வதானால் உயிரி, ரசாயன, உடற்றொழிலியல் விளைவுகள், மருந்தின் செய்கை என்பவற்றுடன் தொடர்புடையதாகக் கருதலாம்.

மருந்தடையும் மாற்றம்


அதாவது உடலானது மருந்துக்கு என்ன விளைவுகளைக் காட்டும் என்பதுடன் தொடர்பானது. அதாவது, உடலிலுள்ள வாத, பித்த, கபம் முதலியன மருந்தில் என்ன மாற்றத்தை அல்லது விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுடன் தொடர்புடையது. இன்னொரு விதத்தில் சொல்வதானால் மருந்தானது சுவை, குணம், வீரியம், விபாகம், பிரபாவம் என்பவற்றுக்கு அமைய உடலில் எவ்வித மாற்றங்களுக்கு உள்ளாகிறது என்பதுடன் தொடர்புடையது.

சாரக மருந்தியல்


இது நோயாளிகளிலும், சாதாரண மக்களிலும் மருந்து என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றிய அறிவியல் கற்கை முறையாகும்.

மருந்துச் சிகிச்சை


இது மருந்தானது நோய் நீக்குவதிலும், குறி குணங்களை நீக்குவதிலும் எவ்விதம் பயன்படுகிறது என்பதுடன் தொடர்பானது.

நஞ்சியல்


இது மருந்துகளினால் ஏற்படும் நச்சு விளைவுகள், நச்சு விளைவுகளைக் கண்டறிதல், அவற்றிற்கான சிகிச்சை என்பவற்றுடன் சம்பந்தப்பட்டது.

குறிப்பு
சிலர் சித்த மருந்துகளில் பக்க விளைவுகளோ, நச்சு விளைவுகளோ இல்லை என்று கூறுவர். இது முற்றிலும் தவறான கருத்தாகும். சித்த மருந்துகள் சரி வரச் சுத்தம் செய்யப்படாமலோ அல்லது அளவிற்கு அதிகமாகவோ அல்லது நீண்ட காலத்திற்கோ பயன்படுத்தப்படும் போது நச்சு விளைவுகளை ஏற்படுத்தவே செய்யும். இது பற்றி சித்தமருத்துவ நூல்களில் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

மருந்களவையியல்


இது மருந்துகளின் பிரமாணம் அல்லது அளவு (dosage)டன் சம்பந்தப்பட்ட பிரிவாகும்.

அவுடக பாகவியல் மருந்காக்கவியல்


இது மருந்துகளின் தயாரிப்பு முறையுடன் சம்பந்தப்பட்ட துறையாகும்.

காய கல்பம்


நோயின்றி நீடித்த ஆயுளுடன் வாழ்வதற்குரிய மருந்துகள் பற்றிய பிரிவாகும்.

அதிகாரபூர்வ மருந்துக் குறிப்பேடு


இது பொதுவாக யாவரும் பயன்படுத்துவதற்கென்று அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளின் தயாரிப்பு, சுத்தத்தன்மை, செயல் முதலியனவற்றைக் கொண்ட குறிப்பேடு ஆகும்.

9/4/19

நோயின்றி வாழ !!

இந்த உலகில் வாழும் உயிரினங்களுக்கு உணவே பிரதானம். உணவு இல்லாமல் எந்த உயிரினங்களாலும் வாழ இயலாது. எல்லா உயிரினங்களும் உணவைப் பெற்று உயிரை வளர்க்கின்றன. ஆனால் மனிதன் மட்டுமே செல்வத்தை தேடி செல்கிறான். பிறகு நோயுற்று செல்வத்தை இழக்கிறான். சில மனிதர்கள் உடலை வலுப்படுத்த எண்ணுகின்றனர். அவ்வாறு வலுப்படுத்த எண்ணியும் செல்வத்தை இழக்கின்றனர். உணவை சரியான நேரத்தில் சரியான முறையில் எடுத்துக் கொண்டாலே உடலுக்கு நோய் என்பது ஏற்படாது. அதனால் நோய் என்பது அனைத்து மக்களுக்கும் பிரச்சினையை தரக்கூடியதாக உள்ளது.

அப்படியானால் எவ்வாறு நோயில்லாமல் வாழ்வது என்று கேள்வி எழுகிறது. அக்கேள்விக்கு பல தீர்வுகள் சித்தர்கள் வழங்கியுள்ளனர். அதில் தேரையர் கூறியுள்ள நோயணுகா விதிகள் பற்றி இப்பதிவில் கூறப்பட்டுள்ளது. எவ்வாறு நோயில்லாமல் வாழ்வது என்பது பற்றி இப்பதிவில் கூறப்பட்டுள்ளது. மேலும் தேரையர் சித்தர் அருளியுள்ள நோயணுகா விதிகள் பற்றிய கருத்துக்கள் பதார்த்த குண சிந்தாமணி ய சில கூறப்பட்டு உள்ளது. இவ்வாறு இவ்விதிகளைப் பின்பற்றினால் எமனே அருகில் வர அஞ்சுவான். எமனே அஞ்சுவான் என்றால் விதிகள் எவ்வாறு இருக்கும் என்று எண்ணுகிறீர்களா …..




நம் தலைமுறைக்கு முன்னர் பயன்படுத்திய சாதாரண வாழ்க்கை முறை தான். அதனால் தான் என்னவோ நம் தாத்தா , கொள்ளு தாத்தா , பரம்பரை எல்லாம் நீண்ட நாள் வாழ்ந்தார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.