Top bar Ad

2/11/18

வாததோஷம்‌

ஆயுர்வேதங்களில் வாததோஷம்‌ அதன்‌ ஸ்தானத்‌தையும்‌ செய்கைகளையும்‌ அனுசரித்து 5 வகையாகப்‌ பிரிக்கப்பட்டிருக்கிறது.

  1. பிராண வாயு
    • மார்பு, கழுத்து முதலான இடங்‌களில்‌ சஞ்சரிக்கும்‌.
    • புத்தி, இருதயம்‌, மனது, இந்திரியங்‌கள்‌ முதலானவைகளுக்கு வன்மை தரும்‌.
    • துப்புதல்‌, தும்‌மல்‌, ஏப்பம்‌, மூச்சு விடுதல்‌ முதலான காரியங்களைச் செய்வதுடன்‌ வாயில்‌ போட்டுக் கொண்ட ஆகாரத்தை வயிற்றுள்‌ செலுத்தும்‌.
  2. உதான வாயு
    • இருப்பிடம்‌ மார்பு.
    • மூக்கு முதல்‌ தொப்புள் வரை சஞ்சரிக்கும்‌.
    • பேச்சு, முயற்சி, காந்தி, பலம்‌, வர்ணம்‌ (தேகநிறம்‌] ஞாபக சக்தி இவைகளையளிக்கவல்லது.
  3. வியான வாயு
    • இருப்பிடம்‌, இ்ருதயம்‌,
    • சரீரமெங்கும்‌ சஞ்சாரம்‌ செய்யும்‌,
    • நடத்தல்‌, நீட்டல்‌, சுருக்கல்‌, கண்களைச்‌ சிமிட்டுதல்‌, முதலானவைகளைச்‌ செய்வதுடன்‌, சரீரத்தில்‌ ஏற்படும்‌ எந்த அசைவுக்கும்‌ காரணமாகும்‌,
  4. சமான வாயு
    • இருப்பிடம்‌ ஐடராக்னிக்குச்‌ சமீபம்‌.
    • குடலில்‌ எப்போதும்‌ சஞ்சரிக்கும்‌.
    • சாப்பிடும்‌ ஆகாரத்தை ஏற்று, பக்குவம் செய்து, ஒவ்வொரு தாதுக்களுக்கும்‌ செலுத்‌துகிறது.
    • மற்றதை வெளித் தள்ளுகிறது.
  5. அபான வாயு
    • இருப்பிடம்‌-குதஸ்தானம்‌.
    • பின்‌புறம்‌, மூத்திரப்பை, துடை, குறிகள்‌ இவைகளில்‌ சஞ்சரிக்கும்‌.
    • சுக்கிலம்‌, ஆதத்தவம்‌, மலம்‌, மூத்திரம்‌, கர்ப்பம்‌ முதலானவைகளை வெளியே தள்ளும்‌.

1/11/18

தனஞ்சயன்‌ வாயு

தந்திர மாகக்கன்னர்‌ தன்னிலே சமுத்திரம்‌ போலச்‌ சுந்திர கோஷமாகித்‌ துலங்குநாள்‌ மரணகால மந்திரநிர்‌ கோஷந்தான்‌ மறையவர்‌ முனிவோர்‌ சொன்ன இந்திரத்‌ தசசேர்வாயு வென்னலா மறிந்துபாரே,
  • தனஞ்சயன்‌ என்ற வாயுவின்‌ நிறம்‌ நீலம்‌.
தனஞ்சயன் என்னும் வீங்கல் காற்று மனித வாழ்வில் இரண்டு முக்கிய பணிகளைப் புரிகிறது.
  1. கருப்பையிலிருந்து குழந்தையை வெளியே தள்ளும்.
  2. மனித உடல் இறந்து வீழ்ந்த பின் ஏனைய ஒன்பது வாயுக்களின் பணிகள் முற்றிலும் நின்று விடும். அத்துடன் அவை யாவும் உடலை விட்டு வெளியேறி விடும்.
  • ஆனால் தனஞ்சயன்‌ பிராணன்‌ உடலைவிட்டு நீங்கிய பின்‌னரும்‌ தான்‌ பிரியாமல்‌ எட்டு நாட்கள்‌ வரை உடலில்‌ நின்று இயங்கிக் கொண்டு இருந்த ஒவ்வொரு செல்களையும் (நுண் திசுக்கள்) இறக்கச் செய்து விடுகிறது.
  • அவ்வமயம் தனஞ்செயன் நுண் கிருமிகளைத் தூண்டிவிட்டு வெளியே இருந்து வெளிக்காற்று, ஒளி உட்புக முடியாமல் உடல் தோல் மற்றும் தசைகளை விறைக்கச் செய்வதும் உடலை வீங்க வைத்தும், அழுகச் செய்தும்‌ (நாற்றமெடுக்கும்படி), (DEGENERATION) முதலானவைகளைச்‌ செய்து மேனியைக் குலைக்கிறது.
  • பின்னர் உடலில் இருந்து வெளியேறி விடுகிறது.
  • இதனை வீங்கற்காற்று என அழைப்பர்.
  • காதில்‌ சமுத்திர கோஷம்‌ போன்ற சத்தத்தை உண்டாக்கினால்‌ மரணம்‌ சமீபித்திகிறது என்று அறியவும்‌, மந்திர கோஷம்‌ போலவும்‌ காதில்‌ சப்தம்‌ உண்டாகும்‌.

31/10/18

தேவதத்தன் வாயு

படுத்ததை யெழுப்பிவித்தம்‌ பசியுட னிற்கப்‌ பண்ணி யெடுத்தசோம்‌ பதனை போக்‌கி யியல்புட நாரபாரக்‌ தொடுத்தபேச்‌ சுண்டாய்மெத்தத்‌ தோன்றிய விடுத்ததோர்‌ ரீலவர்ணம்‌ வீறுமாந் தாத்திலாமே.
  • தேவதத்தனின்‌ நிறம்‌ ஸ்படிக நிறமாகும்‌.
  • குய்யம்‌ முதல்‌ தொடை வரை சஞ்சரிக்கும்‌.
  • உடம்பை எழுப்புவிக்‌கும்‌.
  • பசியைத்‌ தூண்டும்‌.
  • சோம்பலைப்‌ போக்கும்‌.
  • விழித்திருக்கையில்‌ ஓடுதல்‌, உலாவுதல்‌, யுத்தம்‌ செய்தல்‌, சிரித்தல்‌, மனமுடைதல்‌ முதலானவைகனைச்‌ செய்யும்‌.
  • இது கொட்டாவியையும், விக்கலையும் உண்டாக்கும்.
  • விழி உலராயிருக்கவும் , விழியை பாதுகாக்கவும் ,இமைகளை இமைத்தல் (நிமி) என்ற பணியை மேற்கொள்வது தேவதத்தன் ஆகும்.
  • மேலும் நாம் உறங்கும் சமயம் தவிர்த்து விழித்திருக்கும் முழுதும் இடைவிடாது செயாலற்றும் வாயுவை தேவதத்தன் என்பர்.

கிருகரன்‌ வாயு

பண்ணிய நாசிநாவில்‌ பசியாத்தித்‌ தன்மஞ்சொல்லி நண்ணியே யிருத்தல்‌ போதல்‌ நயம்பெரு தேவதத்த னென்னிய படிகவர்ண மியல்குய்யத்‌ தானஞ்‌ சேர்ந்த கன்னியே கடிதானத்தில்‌ கலந்துதான்‌ படிப்பித்தாங்கே,
  • கிருகரன்‌ என்ற வாயுவின்‌ நிறம்‌ உறுப்பு.
  • மூக்கு, நாக்கு முதலிய உறுப்புக்களில்‌ நின்று பசியைத்‌ தெரிவிக்‌கவும்‌, தன்மநெறிகளைப்‌ போதிக்கவும்‌ வல்லது.
  • நடமாடும்‌ சக்தியையும்‌ அளிக்கிறது.
  • புருவ மத்தியைப் பற்றி நீட்டல்‌, முடக்கல்‌, கோபித்தல்‌, அழுகையை உண்டு பண்ணல்‌ முதலானதைச்‌ செய்ய வல்லது.
கொட்டாவி :
  • மூளை ஒய்வு பெறும் போது மூச்சின் வேகம், மூச்சின் எண்ணிக்கை இரண்டையும் குறைக்க முயலும்.
  • அந்நேரம் உறக்கம் வருவதற்கு கொட்டாவி என்ற செயலை ஏற்படுத்துவது கிருகரன் ஆகும்.
  • அவ்வேளை நுரையீரல் உள்ளே உட்புகும் வெளியேறும் பிராண வாயு குறைவினால் உடலின் அனைத்து பாகங்களிலும் பிராண வாயு ஏற்றம் திடீரெனக் குறைவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் நுரையீரலை வேகமாகச் சுருங்கி விரியும் தன்மையினை ஏற்படுத்தி நுரையீரல் பிராண வாயு பற்றாக் குறையினைச் சரிப்படுத்தும் நோக்கமும், ஆக இவ்விரு பணிகளையும் செய்து முடிப்பதும் கிருகரன் என்ற வாயுவின் பணி ஆகும்.