Top bar Ad

21/10/18

பஞ்ச பூதங்கள்‌ உடலை ஆளும்‌ காலங்கள்‌

ஒரு குழந்தை பிறக்கிறது.அதற்கு உடல் உறுப்புகள் உருவாகின்றது. அவ்வுடலுக்கு தேவையான சத்து தாதுக்கள் உருவாகின்றன. இது அனைவரும் அறிந்ததே. ஆனால் சித்தர்கள் கூற்றுப்படி உடலை மேலும் பஞ்ச பூதங்கள் ஆட்கொள்கின்றன.

மண்ணின்‌கூ றிருபதாண்டு வளரப்புத்‌ தேயு வாயு விண்ணின்‌கூ றுடனே நூறு வயதென விளம்புமப்பால்‌ எண்ணில்மூ வேழுகோடி ரோகமு மிதமதாகப்‌ பெண்ணின்‌ மிக்‌ காயமானே ! பிரித்‌துநான்‌ மொழிகின்றேனே.

விளக்கம்

முதல்‌ 20 ஆண்டுகள்‌ பிருதிவியும் (நிலம்) ‌, 40 ஆண்டுகள்‌ வரை அப்பும (நீர்)‌, 60 வயது வரை‌ தேயுவும்‌ (நெருப்பு) , 80 வயது வரை வாயுவும் ‌, 100 வயது‌ வரை ஆகாயமும்‌ இவ்‌வுடலை ஆளுகின்றன. மேலும் 21 கோடி ரோக வகைகளும் உள்ளன. அதைப்பற்றி பின்வரும் பகுதிகளில் காணலாம்.

20/10/18

மனித ஆயுள் மற்றும் தோஷங்களின்‌ காலநிலை

அய்யுமுப்‌ பத்துமூன்‌று வருஷமொன்‌ றதிகநாலு செய்யதிங்‌ களுமாய்ப்‌ பித்தஞ்‌ செய்தியப்‌ படியே சீராய்‌ உய்யவே வாதம்‌ வந்த படியுறு வயது நூறாய்‌ தையலே வாகடத்தின்‌ சாத்திரப்‌ படிகள்‌ தானே.

மனிதரின்‌ ஆயுள்‌ காலம் சராசரி 100 என்று வைத்‌துக்கொண்டால்‌, முதல்‌ 33 வருஷம்‌ 4 மாதம்‌ கபகாலமாகும்‌. பின்னர்‌ 66 வருஷம்‌ 8 மாதம்‌ பித்தத்தின்‌ காலமாகும்‌. மற்றய 33 வருஷம்‌ 4 மாதம்‌ அதாவது 100 வயது வரை வாதம்‌ அதிகரித்திருக்கும்‌ காலமாகும்‌. இவ்வாறு கபம், வாதம், பித்தம் மனிதனின் ஆயுளில் ஆட்கொள்கிறது.

சத்து தாதுக்கள் உருவாதல்

வருரச மிரத்தமாங்கஷம்‌ வளர்கன்‌ ற மேதையத்திக்‌ கருமிகு மஜற்ஜையோடு கலர்ந்தசக்‌ கலந்தா னேழாய்‌ யுருவெனுஞ்‌ சரீரமாக யுயர்‌ சட்டை ரசமுஞ்‌ சேர்ந்து பருவரை முலையினாளே ! பலபல சோகந்தானே.

விளக்கம்

இரஸம்‌, இரத்தம்‌, மாமிசம் (தசை) ‌, மேதசு (கொழுப்பு)‌, அத்தி (எலும்பு) (அஸ்தி), மற்றை, சுக்லெம்‌ ஆக இவைகள்‌ சத்து தாதுக்களாகும்‌.

கற்ப உற்பத்தி

கற்ப உற்பத்தி

மனிதனுக்கு நோய் எப்படி உருவாகிறது என்பதை அறிந்து கொள்ளும் முன் மனிதன் (குழந்தை) எப்படி உருவாகி(ன்)றான்(றது) என்பது பற்றியும் எவ்வாறு வளர்கிறது என்பது பற்றியும் அறிந்து கொண்டு பின்னர் நோய்கள் எப்பொழுது எக்காலத்தில் உருவாகின்றன என்பது பற்றி அறியலாம்.

ஆகனாள்‌ விந்துவுண்டா யஞ்சானாள்‌ கருப்போலாகிப்‌ போகமூ வஞ்சுநாழி(ளி)ல்‌ பொருந்திய முட்டைபோல மேகமாய்த்‌ தீர்க்கமாக யிரண்டினில்‌ மார்மட்டாகிப்‌ பாகமா மூன்றாந்‌ திங்கள்‌ பகருந்தி மட்டுமாமே.
மட்டுட ஞாலாந்திங்கள்‌ வளர்ந்திட்டுப்‌ பாதமெங்குங்‌ கட்டுட னஞ்சாமா தங்‌ கருதுபூ ரணமா மாறில்‌ கட்டுட னெலும்புசவன்‌ தலைமயிர்‌ ஈரம்புமேழில்‌ எட்டுட னறிவாமொன்ப இயல்தச பிறவியாமே,

விளக்கம்

சேர்க்கைக்குப்‌ பின்னர்‌ 5வது தினத்தன்று கருவாகி (நெகிழுந்தன்‌மையுள்ள பிண்டம்‌)றது.
15வது நாளில் முட்டையின்‌ அளவையடைகிறது. நாட்கள்‌ செல்லச்‌ செல்ல இது நீண்ட வடிவத்தையடைந்து பிண்டத்திற்கு மார்பு உண்டாகிறது.
3வது மாதம்‌ வயிறு ஏற்படும்‌.
4வது மாதம்‌ பிண்டத்திற்குக்‌ கால்‌ கைகள்‌ உண்டாகின்றன.
5வது மாதத்திலும்‌ மேற்கூறிய உறுப்புக்கள்‌ நன்றாக வளர்கின்‌றன.
6வது மாதத்தில்‌ எலும்பு, தலை, மயிர்‌, நரம்பு முதலியவைகளுடன்‌
7ம்‌ மாதம்‌ சீவனும்‌ உண்டாகிறது.
8வது மாதம்‌ அறிவு உணர்ச்சி முதலியவை ஏற்படுகிறது.
9வது மாதம்‌ முதல்‌ பிரசவ காலமாகும்‌.