ஒரு குழந்தை பிறக்கிறது.அதற்கு உடல் உறுப்புகள் உருவாகின்றது. அவ்வுடலுக்கு தேவையான சத்து தாதுக்கள் உருவாகின்றன. இது அனைவரும் அறிந்ததே. ஆனால் சித்தர்கள் கூற்றுப்படி உடலை மேலும் பஞ்ச பூதங்கள் ஆட்கொள்கின்றன.
விளக்கம்
முதல் 20 ஆண்டுகள் பிருதிவியும் (நிலம்) , 40 ஆண்டுகள் வரை அப்பும (நீர்), 60 வயது வரை தேயுவும் (நெருப்பு) , 80 வயது வரை வாயுவும் , 100 வயது வரை ஆகாயமும் இவ்வுடலை ஆளுகின்றன. மேலும் 21 கோடி ரோக வகைகளும் உள்ளன. அதைப்பற்றி பின்வரும் பகுதிகளில் காணலாம்.