Top bar Ad

16/10/18

முன்னுரை - தொடர்ச்சி

வித்யாரண்யன்‌

சரியான வரிசையில்‌ நூல்களின்‌ பகுதிகள்‌ அமைக்கப்படவில்லை என்ற குற்றம்‌. ஆனால்‌, அவரவர்களுக்கு அகப்பட்ட பாடல்களை 1000, 2000 முதலிய முழுத் தொகையாக்குவதற்காகத்‌ தங்கள்‌ கைச்சரக்கைக் கொண்டு தங்கள்‌ பாடல்களை சேர்த்திருக்கிறார்கள். இவ்விதம்‌ சேர்க்கப்பட்ட பாடல்களை மருத்‌துவத்தில்‌ அற்ப பழக்கம்‌ உள்ளவர்களும்‌ எளிதில்‌ கண்டு கொள்ளலாம்‌, ஆனால்‌, எமது நாட்டில்‌ நூல்களைக்‌ குறை கூறுவதா, அல்லது அவைகளில்‌ பிற்காலத்திய சேர்க்கை இருப்பதாக எண்ணுவதோ, ஓர்‌ பெரிய பாவம்‌ என்ற எண்ணம்‌ வெகு நாளாக இருந்து வருகிறது. பெரும்பாலும்‌ இந்த எண்ணம்‌ நமக்கு நன்மையையே பயந்திருக்கிறது, ஆனால்‌, சில சமயங்களில்‌ கெடுதலும்‌ ஏற்பட்டிருக்கிறது இப்பொழுது, இந்த நூல்களையெல்லாம்‌ நன்றாக அலசிப்‌ பார்த்து, அவைகளில்‌ நிச்சயமாக மூல ஆசிரியரால்‌ ஏற்‌பட்டதென்‌று சந்தேகமில்லாமல்‌ தோன்‌றக்கூடிய பகுதியை மட்டும் சேர்த்து, புதிய நூல்களை வெளியிட வேண்டிய காலம்‌ வந்துவிட்டது. ஏனெனில்‌ நம்‌ நாட்டுக் குழப்பத்தில்‌ சமஸ்கிருத நூல்களும்‌ அழிந்தன. என்பது உண்மை.

இருந்த போதிலும் நம்‌ நாட்டின்‌ அதிருஷ்டவசத்தால்‌ உதித்த வித்யாரண்யரென்‌ற மஹான்‌, விஜயநகர ராஜ்யத்தைத்‌ தோற்றுவித்ததோடு நில்லாமல்‌, அவருக்கு வாய்த்த லெக்ஷ்மீகடாக்ஷத்தால்‌' வடநாட்டில்‌ பல இடங்‌களுக்கும்‌ மனுஷ்யசர்களை அனுப்பி இந்த நாட்டில்‌ அற்றுப்‌ போன நூல்களையும்‌, அந்நூல்களில்‌ பயிற்சி உடையவர்களையும்‌ வரவழைத்து, நமது கலைகள்‌ விஞ்ஞானம்‌ இவைகளுக்கு புத்துயிர்‌ அளித்தனர்‌. நான்கு வேதங்களுக்கும்‌ புதிதாக பாஷ்யம்‌ எழுதி வைத்தனர்‌. தர்மசாஸ்‌திரத்திற்கென்று ஒரு பெரிய தர்மசாஸ்திரமான பராசரமத்வியத்தை இயற்றியுள்ளார்‌. அதே விதமாக, சங்‌கீதத்துக்காக சங்கீத சாரம்‌ என்ற நூலையும்‌, இன்னும்‌ மற்ற சாஸ்‌திரங்களுக்காகத்‌ தனி நூல்களையும்‌ இயற்றியுள்ளார்‌. நமது இதிஹாஸ புராணங்களில்‌ சிவபரமான பகுதிகளைப்‌ பலவகையாகத்‌ திரட்டி சுமார்‌ 40000 சுலோகங்கள்‌ கொண்ட சங்கர விலாஸம்‌ என்ற நூலையும்‌ தொகுத்திருக்கின்றனர்‌. இவ்விதமாகப்‌ பலநூல்களைத் தாமே தொகுத்தும்‌, பலவிடங்களிலிருந்து சேசரித்தும்‌, சமஸ்கிருதத்திலுள்ள நமது கலை, விஞ்ஞானம்‌ முதலானவைகளைக்‌ காப்பாற்றியுள்ளார்‌. ஆகையால்‌, நமது தமிழ்‌நாட்டில்‌ நமக்குக்‌ கிடைத்திருக்கும்‌. தமிழ்‌ கலை பொக்கிஷங்களை சரியாகப்‌ புரிந்து கொண்டு அதைக்‌ கையாளுவதற்கு, அதே கலை சம்பந்தமான ஸம்ஸ்‌கருத நூல்கள்‌ அவசியம்‌.

தஞ்சையில் இருக்கும் சரஸ்வதி மஹாலில்‌ தமிழிலும்‌, சமஸ்கிருதத்‌திலும்‌, பல கலைகளிலும்‌, சாஸ்‌திரங்களிலும்‌ வல்லவரான பெரியோர்கள்‌, நூல்களைப்‌ பரிசோதித்துச்‌ சேர்த்தும்‌, பல புது நூல்களெழுதியும்‌ சுமார்‌ கிபி. 1400 முதல்‌ 1855 வரை இப்பெரிய பணியை இயற்றியுள்ளார்கள்‌; அவர்கள்‌ பார்த்‌து சேகரித்து வைத்திருக்கும்‌ நூல்களில்‌ ஓர்‌ தனிப் பெருமையுள்ளது. அகத்தியர்‌ பெயரால்‌ அச்‌சானவை சுமார்‌ 50 நூல்களும்‌, இதுவரை அச்சுக்கு வராத நூல்கள்‌ 100ம்‌ கிடைக்கின்றன,

இதில்‌, நாடிபார்த்தல்‌ முதற்கொண்டு நோய்களின்‌ குணாகுணங்கள்‌, அவற்றின்‌ சி்கிச்சைகள்‌ எல்லாம்‌ வரிசைக்‌கிரமமாகக்‌ கொடுக்கப்பட்டிருக்கின்ற, முறைகளெல்‌லாம்‌ மிகவும்‌ அருமையாக அமைந்திருக்கின்‌றன.

சித்த மருத்துவம் - முன்னுரை

பண்டைக்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் பல அரிய மருத்துவ முறைகளை தமது அனுபவத்தின் மூலம் தெரிந்து ஓலைச் சுவடிகளில் பொறித்து வழங்கியுள்ளனர். அத்தகைய நூலில் பற்ப வகைகள், செந்தூர வகைகள், லேகிய வகைகள், சூரண வகைகள், எண்ணெய் வகைகளும் அவற்றின் செய்முறைகளும் கூறப்பட்டுள்ளன. இந்த வெளியீட்டில்‌, நமது புராதன வைத்திய நூல்‌கள், அகத்தியர்‌ முதலிய மஹரிஷிகளாலும்‌, போகர்‌, கொங்கணர்‌ முதலிய பல சித்தர்களாலும்‌, தமிழில்‌ ஏராளமான வைத்திய நூல்கள்‌ எழுதப்பட்டு, தற்காலத்தில்‌ பலராலும்‌ வாசித்துக்‌ கையாளப்பட்டு வருகின்‌றன, ஆனால்‌ நம்‌ தமிழ்‌நாட்டில்‌, சுமார்‌ 600, 700 வருடங்களுக்கு முன்‌ ஏற்பட்ட கலவரத்தில்‌, நமது தமிழ்‌ நூல்களும்‌ சமஸ்கிருத நூல்களும்‌ அழிந்‌துபோயின. அவைகளில்‌ எஞ்சியவைகளே, பிற்காலத்தில்‌ நம்‌ நாட்டில்‌ மூலைமுடுக்குகளிலிருந்து சேகரிக்கப்பட்டு, நூல் வடிவமாக்குப்பட்டு பிரசாரத்தில்‌ இருந்து வருகின்றன. நூல்கள்‌ பல சிதைந்து போய்‌, பலரிடங்களிலிருந்து சேர்க்கப்பட்ட காரணத்தினால்‌, எந்த நூலும்‌ கோர்வையாக முதல்‌ இடை கடை அதனதன்‌ இடத்தில்‌ அகப்படவுமில்லை சேர்க்கப்படவுமில்லை. இந்தக்‌ காரணத்‌தைக் கொண்டே அகப்பட்ட பாடல்களைச்‌ சேர்த்து, அதற்குத்‌ தகுதியான பெயர்‌ வைக்க முடியாமல்‌, நூலாசிரியரின்‌ பெயரையும்‌, பாடல்களின்‌ எண்ணிக்கையையும்‌ சேர்த்து அகத்தியர்‌ 10000, அகத்தியர் ‌4000, அகத்தியர் ‌1500, கொங்கணர்‌ முதல்காண்டம்‌ 1000, நடுக்காண்டம்‌ 1000, கடைக்‌காண்டம்‌ 1000, போகர்‌ 700 என்ற பெயரால்‌ இத்தொகுதிகளுக்கு நாமகரணம்‌ செய்தனர்‌. இந்தத்‌ தொகுதி நூல்களில் தொடர்ந்தாற் போல்‌ எந்த விஷயமும்‌ சொல்லப்படவில்லை. ஓரிடத்தில்‌ மருந்து முறையும்‌, அடுத்தாற் போல்‌ ஓர்‌ யோக முறையும்‌, அதற்கடுத்தபடி ஓர்‌ வியாதியின்‌ குணா குணங்களும்‌, அதன் பிறகு வச்யம் முதலிய மந்திரங்களும்‌ சேர்க்கப்பட்டிருக்கன்‌றன,

சித்த மருத்துவம்

உலகில் பல்வேறு பகுதியில் பற்பல மருத்துவ முறைகளைக் கொண்டு நோய்களைக் குணமாக்குகின்றனர். அம்முறைகளில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, அலோபதி எனும் ஆங்கில மருத்துவம் ஆகியன அடங்கும். இது தவிர வேறு முறைகளிலும் நோய்களை குணமக்குகின்றனர். முதல் மூன்று முறைகளும் இயற்கைலிருந்து கிடைக்கும். வேர், செடி, இலை, கிழங்கு, விதை மற்றும் பல பொருள்கள் கொண்டு மருந்து தயாரிக்கப்பட்டு மக்கள் நோயின்றி வாழ வழி வகுக்கின்றன. இதில் மிகவும் தொன்மை வாய்ந்த மருத்துவம், சித்த மருத்துவமேயாகும். இதனைத் தமிழ் மருத்துவம் என்று அழைப்பர்.

13/10/18

திருமாளிகைத்‌ தேவர்‌

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. கருவூர்த்‌ தேவரும் திருமாளிகைத் தேவரும்
  3. ஐதீகக்‌ கதை

முன்னுரை


இவர்‌ வேதியர்‌ குலத்தில்‌ பிறந்தவர்‌. போகரின்‌ மாணாக்கர்‌. திருவிசைப்பாவாகிய ஒன்பதாம்‌ திருமுறை ஓதிய ஒன்பது நாயன்மார்களில்‌ ஒருவராக விளங்கியவர்‌.

கருவூர்த்‌ தேவரும் திருமாளிகைத் தேவரும்


சைவம்‌ மற்றும்‌ வைணவம்‌ ஆகிய இரு சமயத்தை சார்ந்தவர்களும்‌ போகரிடம்‌ மாணாக்கர்களாக இருந்தனர்‌. இரு சமயத்‌தவர்களில்‌, சைவத்தில்‌ திருமாளிகைத்‌ தேவரும்‌, வைணவத்தில்‌ கருவூர்த்‌ தேவரும்‌ போகரின்‌ சீடர்களுள்‌ முதன்மையானவர்களாக விளங்கினார்கள்‌. ஒருநாள்‌ சிவ பூஜை நிவேதனத்தை திருமாளிகைத்‌ தேவர்‌ கருவூராருக்குக்‌ கொடுக்க, அவர்‌ அதை வாங்கிப்‌ புசித்தார்‌. மற்றொரு நாள்‌, கருவூர்த்‌ தேவர்‌ தமது வைணவ பூஜை நிவேதனத்தை திருமாளிகைத்‌ தேவருக்குக்‌ கொடுக்க, அவர்‌ அதை வாங்க மறுத்தார்‌ அதனால்‌, கோபம்‌ கொண்ட கருவூரார்‌, போகரிடம்‌ விஷயத்தைக்‌ கொண்டு சென்றார்‌. போகரோ, "சைவமே சிறந்த சமயம்‌. ஆச்சாரமான பூஜை சிவ பூஜையே. அதனால்‌ நீசிவ பூஜை நிவேதனம்‌ பெற்றது விசேஷம்‌. வைணவராகிய உனது நிவேதனத்தை நீ அவருக்குக்‌ (திருமாளிகைத்‌ தேவருக்குக்‌) கொடுத்தது தவறு!" என்று பதில்‌ அளித்தார்‌ போகர்‌. இதனால்‌ கருவூர்த்‌ தேவருக்கு போகர்‌ மீது அதிக வருத்தம்‌ இருந்தது. என்றாலும்‌, பின்னர்‌ தனது தவறை உணர்ந்து திருமாளிகைத்‌ தேவருடன்‌ இணைந்து திருவாடு துறையில்‌ இறைப்பணி புரிந்தார்‌. திருவாடுதுறை <>புராண சரிதம்‌" என்ற நூலிலும்‌ திருமாளிகைத்‌ தேவரும்‌, கருவூர்த்‌ தேவரும்‌ அங்கு இறைப்பணி செய்ததாகக்‌ குறிப்புகள்‌ காணப்படுகிறது.

ஐதீகக்‌ கதை


திருவாடுதுறையில்‌ திருமாளிகைத்‌ தேவர்‌ பற்றிய ஒரு ஐதீகக்‌ கதையும்‌ உண்டு. திருமாளிகைத்‌ தேவர்‌ மன்மதனை வென்ற திவ்ய ஸ்வருபம்‌ கொண்டவர்‌. திருவாடுதுறையின்‌ காவிரிக்‌ கரையிலும்‌ நந்தவனத்திலும்‌ மாசிலாமணிப்‌ பெருமான்‌ சந்நிதியிலும்‌ அவர்‌ (திருமாளிகைத்‌ தேவர்‌) தியானம்‌ செய்வதற்காக சஞ்சரிப்பதுண்டு.

வேதியர்கள்

பார்க்கும்‌ பெண்களை எல்லாம்‌ வசீகரிக்கும்‌ அழகிய திருமேனி கொண்டவர்‌ என்பதால்‌, அங்குள்ள வேதியர்‌ குலப்‌ பெண்கள்‌ பலர்‌, அவரை மணக்க விருப்பம்‌ கொண்டு இருந்தனர்‌. அவர்கள்‌ வேறு ஆண்களை மணந்தாலும்‌, அவர்களுக்கு பிறந்த குழந்தை எல்லாம்‌ திருமாளிகைத்‌ தேவரின்‌ சாயலில்‌ தான்‌ இருந்தன.

நரசிங்க நரபதி

இதைக்‌ கண்டு திடுக்கிட்ட வேதியர்கள்‌, கொதிப்படைந்து அந்த நாட்டை ஆண்ட மன்னன்‌ நரசிங்க நரபதியிடம்‌ சென்று தங்கள்‌ மனைவிகளை எல்லாம்‌ ஒரு காமலோலன்‌, தாங்கள்‌ வீட்டில்‌ இல்லாத சமயத்தில்‌ மயக்கம்‌ உண்டாக்கி கற்பழித்து விட்டான்‌ என்று திருமாளிகைத்‌ தேவரைப்‌ பற்றி (அரசினடம்‌) புகார்‌ தெரிவித்தனர்‌. சினம்‌ கொண்ட அரசன்‌ அங்கிருந்த காவலர்களிடம்‌ "அந்தக்‌ கொடுங்கோலனை கயிற்றால்‌ கட்டி இழுத்து வருக!" என்று ஆணையிட்டான்‌. திருமாளிகைத்‌ தேவரிடம்‌ சென்று, காவலர்கள்‌ அரசனின்‌ ஆணையைத்‌ தெரிவிக்க, "கயிற்றால்‌ கட்டிக்‌ கொண்டு போங்கள்‌ !" என அவர்‌ சொல்ல, அவர்கள்‌ கொண்டு வந்திருந்த கயிறு, அவர்களையே கட்டி இழுத்துக்‌ கொண்டு அரசனின்‌ முன்‌ கொண்டு சென்றது. காவலர்களின்‌ செயலுக்குப்‌ பொருள்‌ விளங்காத அரசன்‌ கோபம்‌ தலைக்கு ஏறிய நிலையில்‌, "அவனை வெட்டிக்‌ கொண்டு வருக!" என்று வேறு சில போர்‌ வீரர்களுக்கு ஆணையிட்டான்‌. திருமாளிகைத்‌ தேவரிடம்‌ சென்று காவலர்கள்‌ அரசனின்‌ ஆணையைத்‌ தெரிவிக்க, "தாரளமாக, வெட்டிக்‌ கொண்டு போகலாம்‌!" என்று அவர்‌ சொல்ல, அவர்கள்‌ ஒருவரை ஒருவர்‌ வெட்டிக்‌ கொண்டு சாய்ந்தனர்‌.

அரசனின் மன்னிப்பு

இதனைக்‌ கேள்விப்‌ பட்ட அரசனின்‌ ஆணை எல்லைத்‌ தாண்டிப்‌ போனது. சதுரங்க சேனையோடு மந்திரி, தளபதி, வீரர்கள்‌ புடை சூழ, திருமாளிகைத்‌ தேவரின்‌ இருப்பிடத்தைக்‌ நோக்கிப்‌ புறப்பட்டான்‌ மன்னன்‌. ஞான திருஷ்டியால்‌ இதனை அறிந்த திருமாளிகைத்‌ தேவர்‌, ஒப்பிலா முலையம்மை சந்நிதிக்குச்‌ சென்று முறை இட்டார்‌. அம்மையோ கோயில்‌ திருமதிலின்‌ மேல்‌ வீற்று இருக்கும்‌ விடைக் கன்றுகளை எல்லாம்‌ அழைத்து, தரும நந்தியின்‌ தேகத்தில்‌ அவைகளை ஐக்கியமாக்கி," நீ எதிர்‌ சென்று பகைவென்று வருக!" எனக்‌ கட்டளை இடுகிறார்‌. அம்மைத்‌ தம்மிடம்‌ அளித்த விடைக்‌ கன்றுகளின்‌ சேனையுடன்‌ நந்தி தேவர்‌, அரசனின்‌ சேனையை எதிர்த்துப்‌ போரிட்டு அழிக்கிறார்‌. மன்னனையும்‌ மந்திரிகளையும்‌ உயிருடன்‌ பிடித்து வந்து, தன்‌ சந்நிதியில்‌ சிறை வைக்கிறார்‌. திருமாளிகைத்‌ தேவரின்‌ மகிமையை உணரும்‌ அரசன்‌, பணிந்து அவரிடம்‌ மன்னிப்பும்‌ கேட்கின்றான்‌.

சிவஞான நிஷ்டையில்‌ எழுந்தருளும்‌ திருமாளிகைத்‌ தேவர்‌, அவர்களை மன்னித்து விடுவிக்கச்‌ செய்கிறார்‌. இதனால்‌ திருமாளிகைத்‌ தேவர்‌ உத்தமர்‌ என்பதை வேதியர்களும்‌ அறிந்து கொண்டனர்‌. இவ்வாறு அவரது புகழ்‌ அந்த நாடு முழுவதும்‌ பேசப்பட்டு வெகுவாகப்‌ பரவியது.