Top bar Ad

12/2/19

வியாதிகளைத்‌ தீர்மானிக்கும்‌ முறை

நாடியால் முன்னோர்‌ சொல்லும்‌ நன்குறிக்குணங்களாலும்‌ நீடிய விழியினாலும்‌ நிலைபெறு முகத்தினாலுங்‌ கூடிய வியாதி தன்னைக்‌ கூறிடு குணபாடத்தால்‌ சூடிய குணங்களாலே சுகப்பட மருந்து சொல்வாம்‌.

நாடிகளின்‌ கதியின்‌ பேதங்களினால்‌ ஏற்படும்‌ குறிகுணங்கள்‌, விழி, முகத்தின்‌ வேறுபாடுகள்‌, முதலியவைகளை நன்கு பரீட்சை செய்து, குணபாடத்தில் உள்ள படி வியாதிகளின்‌ குறி குணங்களையும்‌ மனதில்‌ வைத்துக்‌ கொண்டு வியாதிகளைத்‌ தீர்மானித்து மருந்துகள்‌ கொடுக்க வேண்டும்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக