Top bar Ad

30/1/19

சேத்தும சுரம்‌

திகைக்குங்‌ கடுக்குங்‌ கால்கரமுஞ்‌ சிறுகப்பேச்சு மூச்சு வரும்‌ பகைக்கும்‌ வருவோர் தம்மோடே பசித்தேனென்றும்‌ பாடு சொல்லும்‌ வகைக்கு மிடந்தானில்லையென்று வயிறுங்‌ கழியாதினைப்பெடுக்கும்‌ முகைக்குந்‌ தலைக்கும்‌ வேர்வெடுக்கு முளறி மிராஞ்‌ சேத்துமமே.

திகைப்பு அதிகமாகும்‌. கை கால்கள்‌ கடுக்கும்‌. கொஞ்சம்‌ பேசினாலும்‌ மேல்‌ மூச்சு வாங்கும்‌. அடுத்து வருபவர்களிடம்‌ பகைத்துக்‌ கொள்வான்‌. பசி இருக்கிறதென்று கூறமாட்டான்‌. மலம்‌ கழியாது. சுவாசமேற்படும்‌. தலையில்‌ வியர்வையுண்டாகும்‌. இவை கப சுரக்குறிகளாம்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக