முன்னுரை
சுந்தரலிங்கம்
சிவப்பரம் பொருளே ஒரு லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு அநாதி சித்தர் என்ற மூல சித்தராக இருந்து ஒரு சித்தர் பரம்பரையையே உருவாக்கியுள்ளார் இந்த அநாதி சித்தர். முதன்முதலில் சதுரகிரிமலை உச்சியில் ஒரு சுயம்பு சிவலிங்கமாக வெளிப்பட்டார். முதன்முதலில் அகத்தியர்தான் இந்த லிங்கத்தை வழிபட்டார்.பின்னர் சட்டை முனியின் சீடரான சுந்தரானந்தரிடம் அந்தலிங்கத்தைக் கொடுத்தார். சுந்தரானந்ர் அந்தலிங்கத்தை மலை உச்சியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அதனால் அந்த லிங்கத் திருமேனி இன்றும் சுந்தரலிங்கம் என்றே அழைக்கப்ட்டு வருகிறது. சட்டை முனியும் கொஞ்ச காலம் சுந்தரானந்தருடன் சேர்ந்து அந்த லிங்கத்தை வழிபட்டு வந்தார். சுந்தரானந்தர் தான் இன்றும்தொடாந்து வழிபட்டுவருநிறார். இந்த லிங்கம் தோன்றிய பல காலத்திற்குப் பிறகு இந்த லிங்கத்திற்கு கொஞ்சம் உயரத்தில் சந்தரமகாலிங்கம் சந்தனமகாலிங்கம் என இரண்டு மகாலிங்கங்கள் தோன்றி கோயில் கொண்டுள்ளன.
அநாதி சித்தர் பரிவார தெய்வங்களுடன் எழுந்தருளல்
சதுரகிரிக்கு அருகில் உள்ள கோட்டையூரில் பச்சைமால் என்ற மாட்டிடையன் பசுக்களின் பாலைகறந்து தன் மனைவி சடை நங்கை மூலம் விற்று வாழ்க்கை நடத்தி வந்தான். ஒரு நாள் சடை நங்கை மலைச் சரிவிலிருந்து கறந்த பாலை வீட்டுக்குக்
கொண்டுவரும்போது ஒரு முனிவர் “எனக்கு நாக்கு வறண்டு போகிறது. கொஞ்சம்பால் தருவாயா?” என்று கேட்டார். அவளும்!
பால்குடத்தை அவரிடம் கொடுத்தாள். கொஞ்சம் பாலை அவர் குடித்தார். இந்த நிகழ்ச்சி கொஞ்ச நாள் தொடர்ந்து நடந்தது.
கொஞ்ச நாளாய் பால் குறைந்து வருவதைக் கண்டுபிடித்த பச்சைமால் மனைவியை அடித்தான். அதனால் வருத்தமுற்ற சடைநங்கை சுந்தர மகாலிங்கத்திடம் போய் நான் குடும்ப
நன்மைக்காக இந்த தர்மம் கூட செய்யக் கூடாதா? என்று முறையிட்டாள். பால் குடித்த சித்தர் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு
சடை நங்கை!
நான் அநாதி சித்தன். சித்தர் பரம்பரை ஒன்றை உருவாக்கி நான் இந்த லிங்கத்தில் குடிகொண்டுள்ளேன். நீ
இன்று முதல் என் நவசக்திகளில் ஒன்றாக இரு. உன் அண்ணன்மார்கள் எழுவரும் ஐயன் மார்கள் என்றபெயரில் எட்டுத் திசைகளிலும் இருந்து வழி தவறிச் செல்பவர்களுக்கு நேர் வழி காட்டுவார்கள்” என்று கூறி லிங்கத்தினுள் மறைந்தார்
சடை நங்கையும் ஒளிமிக்க தெய்வீக நங்கையானாள். அவள்
அண்ணன்மார்கள் ஐயன்மார்களாக மாறி சதுரகிரிமலைப் பகுதியில் வழி தவறிச் செல்பவர்களுக்கு இன்றும் வழிகாட்டி வருகிறார்கள். தன் மனைவி தெய்வமாக மாறியதைக் கண்ட பச்சைமால் தன் தவறை உணர்ந்து திருந்தி நல்வழியில் நடக்கத் தொடங்கினான். அன்று முதல் ஒரு மாட்டின்பாலை சுந்தரலிங்கத்தின் அபிஷேகத்திற்காக சுந்தரானந்தரிடம் கொடுத்து வந்தான். ஒருநாள் அவன் மந்தையில் அந்த ஒரு பசுவை மட்டும் காணவில்லை. தேடிப் பார்த்ததில் அந்தப் பசு சதுரகிரி மலைச்சாரலில் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தது. ஒரு வேடன் அதன் பால் காம்புகளில் வாயை வைத்து பசுங்கன்றுபோல் அதன் பாலைக்குடித்துக் கொண்டிருந்தான். சுந்தர லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய இருந்த பாலை ஒரு வேடன் குடிப்பதா? என்று ஆத்திரப்பட்டு மாடு மேய்க்கும் கோலால் அந்த வேடனை அடித்தான். அந்த அடிபட்ட வேடனின் அலறல் ஒலி சதுரகிரிப் பகுதி முழுவதும் எதிரொலித்தது. உடனே சுந்தரானந்தரும் சட்டைமுனியும் அங்கே வந்தார்கள். அங்கே வேடன் அநாதி சித்தராக உருமாறி நின்றார்.
பச்சைமால் உண்மை அறியாமலே முன்பு தன் மனைவியை அடித்ததையும் இப்போது சித்தரையே அடித்ததையும் சொல்லிக் கதறினான். அப்போது அநாதி சித்தர் பெரிய சிவலிங்கமாக மாறினார். பச்சைமால் ஒளியாக மாறி அந்த லிங்கத்தில் கலந்தான். கோட்டையூர் மூவரையத்தேவர் என்ற குறுநில மன்னன் அங்கே ஒரு கோவிலும் கட்டினான். அக்கோவிலில் மூலவர் மகாலிங்கேஸ்வரர் அருளாட்சி செய்து வருகிறார். சதுரகிரி சித்தர்கள் இன்றும் சுந்தரலிங்கத்தையும் மகாலிங்கேஸ்வரரையும் வழிபட்டு வருகிறார்கள்.
ஓம் நமச்சிவாய
பதிலளிநீக்குஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய