Top bar Ad

30/10/18

கூர்மன்‌ வாயு

சொல்லியவுதர லாடந்‌ தென்றிமெய்‌ எமந்துகொண்டு வல்லிய பலமுண்டாக்கி வருபுஷ்டி பண்ணிவாயை மெல்லிய நயன மூடல்‌ மிகவுமே திறத்தல்‌ பண்ணுங்‌ கல்லிய கிறுகிறாதி கறுப்புவர்‌ ணமா மென்றே.
  • கூர்மனின்‌ நிறம்‌ வெள்ளையாகும்‌.
  • கூர்மன்‌ என்ற வாயு வயிற்றில்‌ வியாபித்து இவ்வுடலை சுமக்கச்‌ செய்கிறது.
  • உடம்பிற்கும்‌ பலத்தைக்‌ கொடுக்கிறது.
இமைக் காற்று
  • கண்களைச்‌ சிமிட்டச்‌ செய்யும்‌.
  • இது கண்களிலிருந்து திறக்கவும், மூடவும் செய்யும்.
  • மகிழ்ச்சி(புளகம்), சிரிப்பு, முக லட்சணம் முதலியவற்றை உண்டாக்கும்.
  • உள்விழி நீரை சரியான அழுத்தத்தில் வைத்திடவும் விழிகளின் அசைவிற்கு துணை புரிவதும் , மகிழ்ச்சி ,சோகம் மற்றும் விழிக்கு ஒவ்வாத நிலையினை ஏற்படுத்தும் காலங்களில் விழி நீர் என்ற கண்ணீரை வரவழைப்பதும் கூர்மன் என்ற வாயுவின் பணியாகும்.
  • விழிநீரில் சோடியம் குளோரைடு என்ற உப்பு நீர், அல்குமீன் , என்ற முட்டைச் சத்து சிறிதளவு சளி போன்ற கிருமி நாசினிகளை வெளியேற்றி விழிகளை பாதுகாப்பதும் கூர்மனின் பணியாகும்.

29/10/18

நாகன் வாயு

  • நாகன்‌ என்ற வாயுவின்‌ நிறம்‌ தங்க நிறமாகும்‌.
  • ரோமக்‌ கால்கள்‌ தோறும்‌ தங்கி அசைவையளிக்கும்‌.
  • நாகன் கொட்டாவி, விக்கல்‌, கக்கல், சோம்பல்‌ முதலியவைகளையுண்டாக்கும்‌.
  • விழிக்காற்று என்றழைக்கப்படும் நாகன் கழுத்தில் இருந்து வாந்தியை உண்டாக்கும்.
  • கண்களினால் பார்க்கச் செய்யும்.

தும்மல் காற்று

பிராணனின் தலைமை வாயிலான மூக்கு மற்றும் கேந்திர பாகமான நுரையீரலின் அனைத்துப் பகுதிகளிலும் நோய்த் தொற்று ஏற்படுத்தும் கிருமிகள் தூசு, மாசுக்காற்று , ஆகியவைகள் உட்புகாமல் வெளியேற்றும் வகையில் மூளையின் அதிவேக கட்டளையின்படி சாதரண மூச்சின் அழுத்தம் மற்றும் வேகத்தை விட பல நூறு மடங்கு வேகமும் அழுத்தமும் கொண்ட தும்மல் என்ற நிகழ்வினை ஏற்படுத்தும் வாயு நாகன் ஆகும்.

இதனை தும்மற் காற்று எனக் கூறுவர்.

மேலும் கபாலத்தின் கீழ்ப்பகுதி ,கண்களின் நேர்பின் பகுதி , மூக்கின் வலது மற்றும் இடது உள் பள்ளப்பகுதி (CAVITY) ஆகியவற்றின் சவ்வுகளின் ஒவ்வாமை (அலர்ஜி) காரணமாக இறந்த செல்களை வெளியேற்றவும் , தும்மல் மூலம் வெளியேற்றுதலுக்கு நாகன் வாயு உதவி புரிகிறது.

28/10/18

சமான வாயு

கொண்டமுன்‌ னன்னந்தன்னில்‌ கொள்ரச முரோமஞ்‌ சேர்க்குங்‌ கண்டமுன்‌ னாகவாயுக்‌ காரண வண்ணம்‌ பொன்னா மண்டரோ மங்களாகி யசைவிலாப்‌ பாடிவிக்கும்‌ விண்டகூர்‌ மந்தான்வண்ண வெள்ளாையாய்ச்‌ சொல்லுமென்றே,
  • சமான வாயு நீல நிறத்தையுடையது.
  • இதற்கு வயிறே இருப்பிடமாகும்‌.
  • உடலின் அனைத்துப் பகுதிகளில் உள்ள திசுக்கள் மற்றும் மிக நுண்ணிய உடலணுக்களை வளர்க்கவும் பராமரிக்கவும் காரணியாய் உள்ளது
  • இச்சமானன் வாயு, உதான வாயு அனுப்பும் உணவின் சாரத்தை உடலில் உள்ள நாடி நரம்புகளுக்கு சமமாகப் பங்கிட்டு உடலை வளர்க்கும்.
  • பல்வேறு வகை புரதம் மற்றும் இதர தாதுக்களை உணவில் இருந்து பிரித்தல் , உணவை செரித்தல் , அவ்விதம் செரித்தல் மூலம் கிட்டிய சத்துக்களை உடல் முழுதும் பரவச்செய்தல் போன்ற பணிகளைச் செய்யும் வாயுவே சமானன் ஆகும்.
  • சமான வாயு, சாப்பிட்ட ஆஹாரத்திலிருந்து ஏற்படும்‌ ரஸ தாதுவை மயிர்க்‌ கால்கள்‌ தோறும்‌ சேர்க்கும்‌ தன்மையைப்‌ பெற்றது.
  • இதனை நிரவுக்காற்று (பரப்புதல், சேர்ப்பித்தல்) எனப் பெயர் பெறுகிறது.

27/10/18

உதான வாயு‌

என்னநின்‌ றெழும்புவித்‌து யெடுப்பித்தும்‌ நித்திவித்து மன்னசா ரங்களெல்லா மந்தந்தத்‌ தானஞ்‌ சேர்க்கும்‌ சொன்னதோர்‌ சமானவாயு தோன்‌றிய நீலவன்னம்‌ பன்னிய நாபிசேர்ந்து பாத்தங்கஞ்‌ சமன்கொண்டாமே,
  • உதான வாயுவின்‌ நிறம்‌ மண்ணின்‌ நிறத்தை யொத்‌தது.
  • இருதயத்தை இருப்பிடமாகக் கொண்டது.
  • தும்மல்‌, ஏப்பம், இருமல்‌, கனவு முதலியவைகளுக்குக்‌ காரணமானது.
  • இதையன்றி, மேலெழும்பச்‌ செய்தல்‌, தூக்குவிக்கும்‌ வன்மை, நிற்றல்‌, அன்னரஸத்தை அந்தந்த தாது ஸ்தானங்களுக்குச்‌ சேர்த்தல்‌ முதலியவைகளையும்‌ உதான வாயு செய்யக்‌ கூடியது.
  • இந்த வாயு, செரிமானத்திற்கு உதவி புரிய, வயிற்றில் உள்ள வெப்ப சக்தியை எழுப்புவதுடன், உணவின் சாரத்தை உடலின் பாகங்களுக்கு அனுப்பும்.

ஒலிக்காற்று


உதானன் ஓசையோடு கலந்து குரல் ஒலியை எழுப்பும்.

மூச்சு மண்டலத்தின் மேல் பகுதியில் உள்ள முன் தொண்டை, மூக்கு ,குரல் வளை, மூச்சுக்குழல் , மூச்சின் இதர கிளை குழல்கள் ஆகிய கருவிகளின் உதவியினாலும் நாபி எனும் பகுதியில் இருந்து பிராண உந்துதலால் குரல் (சப்தம்) எழும்புவதற்கு அடிப்படை உதானன் ஆகும்.

மேலும் குரல் வளையினுள் உட்பக்கத்திற்குள் இரண்டு பக்கத்திலும் பக்கத்திற்கு இரண்டு திசுக்களான மடிப்புகள் இடைவெளியுடன் அமையப் பெற்றுள்ளன. இம்மடிப்புகள் குரல் நாண்கள் எனப்படுவதாகும். இதனுள்ளே உதானன் செல்கிறபோது குரல் நாண்கள் அதிர்ந்து ஒலியினை எழுப்புகின்றன.
ஆகையால் உதானன் ஒலிக்காற்று என்றழைக்கப்படும்.