Top bar Ad

22/10/18

பஞ்சகக்கருவி

சீர்பிரி திவியப்புத்‌ தேயு வாயுவுந்தானாம்‌ பார்பெரு மாகாசத்தோ டைந்துபூ தங்களாகும்‌ நேர்பிரி திவியின்‌ கூறு நெடுமயி செலும்புந்‌ தோலும்‌ பார்பெரு நரம்போ டெல்லாம்பகர் தசை தன்னோடைந்தே,
அப்புவின்‌ கூறுதானு மாடநீீ ருதிரம்‌ வெள்ளை செப்புமுன்‌ மூளைமஜ்ஜை தேயுவின்‌ கூறேதென்னி லொப்புமா ௫ 'மலுச வுயர்பயம்‌ போகஞ்சோம்பு இப்புவி வாயுவின்‌ கூறதென்னி லியம்புவாயே.
ஓடது மிருத்தல் தானு முயர்பெற கடத்தல்‌ நிற்றல்‌ வாடலுங்‌ கிடந்த லஞ்சம்‌ வளருமா காசமென்னில்‌ காடமுன்‌ காமங்குரோத நலம்பெரு மோகம்‌ லோபம்‌ தேடமுன்‌ மதமோ டைந்துந்‌ தெளிந்துநீர்‌ தேர்ந்துபாரே.

பிரிதிவி (நிலம்), அப்பு (நீர்), தேயு (நெருப்பு), வாயு (காற்று), ஆகாசம்‌ (ஆகாயம்) என்பது பஞ்ச பூதங்களாகும்‌.

தேகத்தில்‌ பிரிதிவியின்‌ அம்சமாவது

மயிர்‌, எலும்பு, தோல்‌, நரம்பு, தசை, இவைகளாகும்‌,

தேகத்தில்‌ அப்புவின்‌ அம்சமாவது

நீர்‌, உதிரம்‌, வெள்ளை பாகங்கள்‌, மூளை, மஜ்ஜை.

தேகத்தில்‌ தேயுவின்‌ அம்சங்கள்‌

ஆகாரம்‌, பயம்‌, போகம்‌, சோம்பல்‌, தூக்கம்‌.

தேகத்தில்‌ வாயுவின்‌ அம்சங்களாவன

ஓடுதல்‌, இருத்தல்‌, நடத்தல்‌, நிற்றல்‌, கிடத்தல்‌.

தேகத்தில்‌ ஆகாசத்தின்‌ அம்சங்கள்‌

காமம்‌, க்ரோதம்‌, மோகம்‌, லோபம்‌, மதம்‌ இவைகளாகும்‌.

21/10/18

பஞ்ச பூதங்கள்‌ உடலை ஆளும்‌ காலங்கள்‌

ஒரு குழந்தை பிறக்கிறது.அதற்கு உடல் உறுப்புகள் உருவாகின்றது. அவ்வுடலுக்கு தேவையான சத்து தாதுக்கள் உருவாகின்றன. இது அனைவரும் அறிந்ததே. ஆனால் சித்தர்கள் கூற்றுப்படி உடலை மேலும் பஞ்ச பூதங்கள் ஆட்கொள்கின்றன.

மண்ணின்‌கூ றிருபதாண்டு வளரப்புத்‌ தேயு வாயு விண்ணின்‌கூ றுடனே நூறு வயதென விளம்புமப்பால்‌ எண்ணில்மூ வேழுகோடி ரோகமு மிதமதாகப்‌ பெண்ணின்‌ மிக்‌ காயமானே ! பிரித்‌துநான்‌ மொழிகின்றேனே.

விளக்கம்

முதல்‌ 20 ஆண்டுகள்‌ பிருதிவியும் (நிலம்) ‌, 40 ஆண்டுகள்‌ வரை அப்பும (நீர்)‌, 60 வயது வரை‌ தேயுவும்‌ (நெருப்பு) , 80 வயது வரை வாயுவும் ‌, 100 வயது‌ வரை ஆகாயமும்‌ இவ்‌வுடலை ஆளுகின்றன. மேலும் 21 கோடி ரோக வகைகளும் உள்ளன. அதைப்பற்றி பின்வரும் பகுதிகளில் காணலாம்.

20/10/18

மனித ஆயுள் மற்றும் தோஷங்களின்‌ காலநிலை

அய்யுமுப்‌ பத்துமூன்‌று வருஷமொன்‌ றதிகநாலு செய்யதிங்‌ களுமாய்ப்‌ பித்தஞ்‌ செய்தியப்‌ படியே சீராய்‌ உய்யவே வாதம்‌ வந்த படியுறு வயது நூறாய்‌ தையலே வாகடத்தின்‌ சாத்திரப்‌ படிகள்‌ தானே.

மனிதரின்‌ ஆயுள்‌ காலம் சராசரி 100 என்று வைத்‌துக்கொண்டால்‌, முதல்‌ 33 வருஷம்‌ 4 மாதம்‌ கபகாலமாகும்‌. பின்னர்‌ 66 வருஷம்‌ 8 மாதம்‌ பித்தத்தின்‌ காலமாகும்‌. மற்றய 33 வருஷம்‌ 4 மாதம்‌ அதாவது 100 வயது வரை வாதம்‌ அதிகரித்திருக்கும்‌ காலமாகும்‌. இவ்வாறு கபம், வாதம், பித்தம் மனிதனின் ஆயுளில் ஆட்கொள்கிறது.

சத்து தாதுக்கள் உருவாதல்

வருரச மிரத்தமாங்கஷம்‌ வளர்கன்‌ ற மேதையத்திக்‌ கருமிகு மஜற்ஜையோடு கலர்ந்தசக்‌ கலந்தா னேழாய்‌ யுருவெனுஞ்‌ சரீரமாக யுயர்‌ சட்டை ரசமுஞ்‌ சேர்ந்து பருவரை முலையினாளே ! பலபல சோகந்தானே.

விளக்கம்

இரஸம்‌, இரத்தம்‌, மாமிசம் (தசை) ‌, மேதசு (கொழுப்பு)‌, அத்தி (எலும்பு) (அஸ்தி), மற்றை, சுக்லெம்‌ ஆக இவைகள்‌ சத்து தாதுக்களாகும்‌.