சித்த மருந்துகளைப் பற்றி அதாவது அவற்றின் வரலாறு, குணம், செய்கை, அகத்துறிஞ்சல், விநியோகம், அனுசேபம், வெளியேற்றப்படல் (கழிவகற்றல்) என்பது பற்றிய முழுமையான அறிவு சித்த மருந்தியல் ஆகும்.
மறுப்பதுடல் நோய் மருந்தெனலாகும்
மறுப்பதுள நோய் மருந்தெனச்சாலும்
மறுப்பதினி நோய் வராதிருக்க
மறுப்பது சாவை மருந்தெனலாமே
திருமூலர் எண்ணாயிரம்.
அதாவது உடல், உள நோய்களை நீக்குவதும், நோய் வராது இருக்க உதவுவதும், உரிய வயதுக்கு முன்னர் மரணத்தைத் தவிர்ப்பதும் (காய கல்பம்) ஆன பொருள் எதுவோ அதுவே மருந்து எனப்படும்.
தற்கால மருந்தியலின் படி மருந்து என்பது நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவுவதும், அல்லது நோய் வராமல் தடுக்க உதவுவதும். அல்லது நோயைக் கண்டறிய உதவுவதுமான பொருள் எதுவோ அதுவே மருந்து என்று கூறப்பட்டுள்ளது.
அருமை
பதிலளிநீக்கு