அருள்மிகு குருதட்சிணாமூர்த்தி சுவாமியின் முற்பிறவி வாழ்க்கை
சிவனார் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை குரு தட்சிணா மூர்த்தியாக அவதாரம் செய்திருக்கிறார்.
இவர் யாரிடமும் தீட்டைச வாங்கியவரல்லர். உலகின் முதல் குருவாக தோன்றி பலருக்கு தீட்சை அளித்து உலகை உய்விப்பதற்காக ஒரு சித்தர் பரம்பரையையே உருவாக்கி இருக்கிறார் என்பதும் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் மன்மத வருடம் ஆவணி மாதம் 12 ஆம் நாள் (29.8.1835) புதன்கிழமை வளர்பிறை திரிதியை திதி உத்திரம் நட்சத்திரம் கூடிய நன்னாளில் பகல் 12 மணியளவில் விருச்சிக லக்னம் கன்னி ராசி கூடிய நல்லோரையில் திருவாரூர் வன்மீக புறத்தில் ஜீவசமாதி பூண்டு க்ரமவினை பாதிப்புகளுக்கு உள்ளாகி இல்லற வாழ்வில் ஈடுபட்டு வரும் நம்மையெல்லாம் கரையேற்ற வேண்டிய அருட் குருவாக இருந்து வழிகாட்டி வருபவரும், அருவமாய் இருந்து அண்டங்கள் அனைத்தையும் இயக்கி வரும் அந்த ஆதிப் பரம்பொருளே அன்றி வேறு அல்ல என்பது இங்கு ஓர்ந்து உணரற்பாலது.
பரம்பொருள் குரு தட்சிணா மூர்த்தியாக முதல் அவதாரம் எடுத்திருந்தபோது அதாவது 6000 ஆண்டுகளுக்கு முன் சுமார் எட்டு சீடர்களுக்கு ஆன்மீக ஞானத்தை உபதேசம் செய்திருக்கிறார்.
அவர்களில் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நால்வருக்கும் கல்லால மரத்தடியிலிருந்து சொல்லாமல் சொல்லி (மோன மொழியில்) ஞானோபதேசம் செய்திருக்கிறார். சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்கிரம பாதர், திருமூலர் ஆகியோர் மற்ற நால்வர் ஆவர். இந்த உண்மையை திருமந்திரம் 68 ஆம் பாடலில் திருமூலர்.
“
நந்தி அருள்பெற்ற நாதரை நாடினின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோடு எண்மருமாமே
”
என்று விளக்கியுள்ளார்.
சிவபெருமானின் குரு மூர்த்தமான தட்சிணாமூர்த்தி சுவாமிகள் பதஞ்சலி முனிவருக்கு
“பாரப்பாபதஞ்சலியே சொல்லக்கேளாய்
பாங்கான முப்பூவை அறிய வேணும்
சேரப்பா சுழி முனையில் மனக்கண் நாட்டி
செயலான அம்பரத்தைக் காணவேணும்
நாரப்பா நரம்புத்தசை தோலாம்வீட்டை
நம்பாதே என் மகனே நடுவைப்பாரு காரப்பா திரிகோண ஆட்சிவீட்டை
கைமுதலாய் சிலேத்துமத்தை கழற்றிப்பாறே. “
என்று உபதேசம் செய்துள்ளார். அவரே எழுதிய ஞான சூத்திரம் பாடல்கள் 10இல் இது 7வது பாடல். இந்த ஞான சூத்திரம் தவிர திருமூலர் 1500 என்ற நூலையும் அவர் எழுதியுள்ளார்.
ஆதி சிவனே இந்த தட்சினாமூர்த்தி என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
இவரைப் பற்றி போகர் 7000 என்ற நூலில் ,
“ஆதியில் தட்சிணா மூர்த்தியப்பா
அப்பனே அவர் மரபு ஏனெறாக்கால்
நீதியாம் கவுண்டன்என்ற மரபு யாகும்
நிஷ்களங்கம் ஆனதொரு மூர்த்தி என்பார். போ. ஏ : 5716
“கோனான தட்சிணாமூர்த்தி அப்பா
குவலயத்தில் வெகுகாலம் இருந்த சித்து
மானான வயததுவும் ஏனெறாக்கால்
மகத்தான ஆயிரத்தி சொச்சமப்பா
பானான படிஏழும் கடலும்சுத்தி
பாரினிலே உழன்றதொரு சித்து தானே “
போ. ஏ: 5,807
காணவே தட்சிணா மூர்த்தியாகும்
காசியினில் திருமந்திரம் பாடினோர்தான்
“
ஆணவங்கள் தான் ஒடுங்கி சித்துதானும்
அன்பான காசிபதி சென்றிட்டாரோ
“
போ. ஏ: 5,808
“
சென்றாரே நர்மதா நதியின் பக்கம் சிறப்புடனே தட்சிணாமூர்த்தி நாயன்
குன்றான கரையோரம் மண்டபந்தான்
கொற்றவனார் சமாதிமுகம் சென்றுமல்லலோ
வென்றிடவே ஒருயுகமாம் அறுபதாண்டு உத்தமனார் தானிருந்த சித்து தானே
“
போ. ஏ: 5809
இதன் பொருள்
“தட்சினாமூர்த்தி என்பவர் ஒரு மகா சித்தர் . இவர் கவுண்டர் குலத்தில் பிறந்தவர். களங்கம் சிறிதுமற்ற குருமூர்த்தி ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் வாழ்ந்தவர். ஏழு கடல்களாலும் சூழப்பட்ட உலகம் முழுவதும் சுற்றியவர்.
திருமந்திரம் என்ற நூலை பாடியவர். இவர் காசி வரை சென்று திரும்பும் வழியில் நர்மதை நதிக்கரையில் ஒரு மலைக் குன்றின் அடிவாரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் ஜீவ சமாதி பூண்டு சுமார் ஒரு யுகம் 60 ஆண்டுகாலமாக ஜீவன் முக்தராக வாழ்ந்து வருகிறார் “ என்று போகர் கூறுகிறார்.
இவரைப்பற்றி அகத்திய முனிவரும்
“
கேளப்பா புலத்தியரே மச்சகேந்திரா
கெடியான மலை வளமாம் தட்சிணாயன்
சூளப்பா நதியாரு குண்ணுமுண்டு
சுந்தரரே வில்விசய பூபா கேண்மோ
நாளப்பா வரைகோடி காலந்தானும்
நானிலத்தில் பிரளயங்கள் கண்ட சித்து
பாரப்பா போகாமல் ஸ்தூலந்தன்னை
பார்தனிலே மறைத்து வைத்த சித்துவாமே
“
என்று பாடியுள்ளார். போகர் கூற்றும் அகத்தியர் கூற்றும் ஒன்றாக இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதே குரு தட்சணாமூர்த்தி இப்போது நம் போன்ற சாதாரணமான இல்லறத்தார்க்கு திருமூலர், அகத்தியர் போன்ற மகா சித்தர்களும் அடைய முடியாத பேரின்ப வாழ்வை தவம், யோகம் எதுவும் செய்யாமலே அறம் வழுவா பக்தி மூலம் அடைவதற்குரிய எளிய வழியைக் காட்டி வரும் குருவாக திருவாரூரில் ஜீவசமாதி பூண்டிருந்து அருளாட்சி செய்து வருகிறார் என்று நம்பப்படுகிறது.
அற்புத தகவல்
பதிலளிநீக்கு