Top bar Ad

4/9/18

தன்வந்திரி

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. புராண கருத்து
  3. அகத்தியர் கண்ட தன்வந்திரி
  4. ஆயுர்வேதத்தின்‌ தந்தை
  5. ஜீவ சமாதி
  6. தன்வந்திரி வழிபாட்டுப்‌ பாடல்

முன்னுரை


வண்ணமாம்‌ எட்டு வகை பரீட்சை பார்த்து வகையான நாடியுட்கு குணமுங்‌ கண்டு திண்ணமாம்‌ திரேகத்தின்‌ செயலும்‌ பார்த்து தேசதேசப்‌ பேதச்‌ செயலறிந்து கண்டு கண்ணமாய்‌ காலாகாலங்கள்‌ பார்த்துக்‌ கனமான அத்தினியின்‌ கணக்கறிந்து பண்ணமாம்‌ பலகலவாம்‌ மணலை தேர்ந்து பரிகாரப்‌ பயனறிந்து பார்த்துச்‌ சொல்லே!
தன்வந்திரி.
மேற்கண்ட இந்தப்‌ பாடலை எழுதியவர்‌ தன்வந்திரி.
இவர்‌ மாகாவிஷ்ணுவின்‌ அம்சம்‌ என்றும்‌, ஒரு கையில்‌ கமண்டலமும்‌ மறு கையில்‌ கதையும்‌ கொண்டிருந்தவர்‌ என்றும்‌, காசிராஜன்‌ என்பவரின்‌ புதல்வனான இவருக்கு கேதுமான்‌ என்று ஒரு மகன்‌ இருந்ததாகவும்‌ அபிதான சிந்தாமணி குறிப்பிடுகிறது. தன்வந்திரி நிகண்டு, வைத்திய சிகாமணி 1200, கலைஞானம்‌ 500 ஆகிய நூல்களில்‌ இருந்து சுமார்‌ 2300 பாடல்கள்‌ இவர்‌ பெயரில்‌ பாடப்‌ பெற்றதாக மேற்கொண்டு குறிப்புகள்‌ உள்ளன.
ஆயுள்‌ வேதரும்‌ காலக்‌ கனிதரும்‌ என்ற சிலப்பதிகாரக்‌ காப்பியத்தின்‌ குறிப்பைக்‌ கொண்டு, தமிழ்‌நாட்டில்‌ கி.பி. 2 ஆம்‌ நூற்றாண்டுக்கு முன்னரே இந்த மருத்துவ முறை நடை முறையில்‌ இருப்பதை அறிய முடிகிறது. அதனால்‌, இவரது காலமும்‌ கி.பி. 2 ஆம்‌ நூற்றாண்டுக்கு முற்பட்டதாகக்‌ கருதப்படுகிறது.
மேலும்‌, தமிழ்‌ நாட்டில்‌ வாழ்ந்த இந்தத்‌ தமிழ்ச்‌ சித்தரே தனது வடமொழிப்‌ புலமையால்‌ தமிழ்‌ சித்த மருத்துவத்தை ஆயுர்வேத மருத்துவமாக வடமொழி நிகண்டுகளால்‌ "தன்வந்திரி" என்று இயற்றி இருக்கின்றார்‌ என்பதும்‌ உண்மை. இதனாலேயே, பிந்தைய காலங்களில்‌ தன்வந்திரி என்று இவர்‌ அழைக்கப்பட்டார்‌. வாகட நூலில்‌ வல்லவராக விளங்கிய தன்வந்திரி, விக்கிரமாதித்தன்‌ சபையில்‌ நவரத்தினம்‌ என்னும்‌ பட்டம்‌ பெற்ற பண்டிதர்க்‌குழுவில்‌ ஒருவர்‌ என்றும்‌; இவருடைய வடமொழி நிகண்டே தன்வந்திரி என்றும்‌ தமிழ்ப்‌ பெயர்ச்‌சொல்‌ அகராதி என்ற நூலில்‌ குறிப்பொன்று காணப்படுகிறது.

புராண கருத்து


தன்வந்திரி மகாவிஷ்ணுவின்‌ அவதாரம்‌. தேவர்களும்‌ அசுரர்களும்‌ அமுதத்திற்காக திருப்பாற்கடலைக்‌ கடைந்தபோது அமுத கலசத்துடன்‌ பாற்கடலிலிருந்து வெளிவந்தவர்‌. தேவர்களுக்கு அமுதத்தை வழங்கி அவர்களுக்கு மரணமிலாப்‌ பெருவாழ்வு அளிப்பதற்கென்றே தோன்றியவர்‌.
போகர்‌ கண்ட தன்வந்திரி.

சட்டமுடன்‌ தன்வந்திரி ஜாதிபேதம்‌ தகமையுள்ள மகாவிஷ்ணு என்னலாகும்‌ வட்டமுன்ள தலைமுறைகள்‌ முப்பதிரண்டு வளமுடன்‌ கண்டறிந்த நூலிதாமே
- போகர்‌ 7000 / 5770 ஆம்‌ பாடல்‌

சத்தியுள்ள மகாவிஷ்ணு என்றே சொல்வர்‌ தாரணியில்‌ மானிடராம்‌ சித்து வாகும்‌ முத்திபெற ஐப்பசியாம்‌ திங்களப்பா முனையான புனர்பூசம்‌ நாலாம்‌ காலே.
- போகர்‌ 7000 / 5877 ஆம்‌ பாடல்‌

போகர்‌ கூற்றுப்படி தன்வந்திரி பூமியில்‌ விஷ்ணு குலத்தில்‌ மானிடராய்‌ பிறந்தவர்‌. இவரை மகாவிஷ்ணுவின்‌ அவதாரம்‌ என்றும்‌ கூறுவார்கள்‌. இவர்‌ மண்ணுலக மக்கள்‌ நன்மைக்காக முப்பத்திரண்டு தலைமுறைகளில்‌ மீண்டும்‌ மீண்டும்‌ மனிதனாகப்‌ பிறந்து ஆயுர்வேதம்‌ என்ற மருத்துவ நூலைத்‌ தொகுத்து அளித்துள்ளார்‌.
முதலில் தீர்க்கமர்‌ என்பவரின்‌ மகனாகப்‌ பிறந்து பல வைத்திய நூல்களைத்‌ தந்தருளினார்‌. பிறகு காசி ராஜனின்‌ மகனாகப்‌ பிறந்து சித்தர்கள்‌ பலரிடம்‌ மூன்றுலட்சம்‌ கிரந்தங்களைக்‌ கேட்டறிந்தார்‌. பிறகு சேதுமான்‌ என்ற பெயரோடு தீர்த்த பசு என்ற மன்னரின்‌ மகனாகப் பிறந்து ஆயுர்வேதம் என்ற தலைப்பில் மேலும் பல மருத்துவ நூல்களை எழுதினார். இந்தப் பிறப்பில் கனிஷ்க மன்னனின் அவையை அலங்கரித்த சுஸ்ருதர்‌ என்ற மருத்‌துவமேதைக்கு ஆயுர்வேத மருத்துவ முறையைக்‌ கற்பித்தார்‌. பிறகு அனு என்ற அரசனின்‌ மகனாகப்‌ பிறந்து பராசர முனிவரிடம்‌ பாடங்கள்‌ கற்று ஆயுர்வேதம்‌ என்ற வடமொழி நூலை முழுமையாக எழுதி முடித்தார்‌.

இவைகளையெல்லாம்‌ முழுமையாகத்‌ தொகுத்துப் பார்க்கும்‌ பொழுது தன்வந்திரி 32 தலைமுறைகளில்‌ பல பிறவிகள்‌ எடுத்து நான்கு வேதங்களுக்கும்‌ இணையான ஆயுர்வேதத்தை வடமொழியில்‌ தொகுத்தருளினார்‌ என்பது பெறப்படுகிறது. விஷ்ணு குலத்தவரான இந்த தன்வந்திரி ஸ்ரீரங்கம்‌ அரங்கநாதர்‌ ஆலயத்தில்‌ தனிச்சன்னதி கொண்டு அருளாட்சி செய்து வருகிறார்‌ என்பது வைணவ நெறி கண்டுள்ள தெளிவான முடிவு.

ஓம்‌ நமோ பகவதே வாசு தேவாய தன்வந்த்ரயே, அம்ருதகலஸ ஹஸ்தாய, சர்வாமய விநாச னாய, த்ரிலோக்ய நாதாய, ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ.

என்ற மந்திரத்தை தினமும்‌ 1008 முறை கூறி பக்தியுடன்‌ தன்வந்திரி பகவானை வழிபட்டுவந்தால்‌ உடல்‌ நோய்களும்‌ மன நோய்களும்‌ குணமாகின்றன என்பது அனுபவ பூர்வமான உண்மை.

அகத்தியர் கண்ட தன்வந்திரி


அகத்தியர்‌12000 என்ற நூலின்படி மகாவிஷ்ணுவே தன்வந்திரி பகவான்‌ என்றும்‌ தமிழ்‌ மக்கள்‌ நோயற்ற நல்வாழ்வை இன்புற்று வாழ வேண்டும்‌ என்ற நோக்கத்தில்‌ தமிழகத்தில்‌ மானிடராய்ப்‌ பிறந்து ஆயுர்வேத வைத்திய சித்தாந்தங்களை யெல்லாம்‌ தமிழ்க் கவிதை வடிவில் தொகுத்துத் தந்துள்ளார்‌ என்றும்‌ தெரியவருகிறது.

மாச்ச லென்றதன்‌ வந்திரி வளப்பம்‌ கூறுவேன்‌ மன்னவனே முற்பிறப்பில்‌ விஷ்ணு என்பார்‌ பாச்சலுடன்‌ இப்பிறப்பில்‌ தன்வந்திரி தானும்‌, பலாகனே மானிடராய்ப்‌ பிறந்தார்காணே.
- அகத்தியர்‌ 12000 / 4/ 427

பூணவே அவர்தாதை தந்தை தாயும்‌ புகழ்பெறவே காயத்ரி நாமம்‌ கொண்டு வேணபடி தம்பூரு வீணை கீதம்‌ வித்தகனார்‌ கையேந்தியாசிர்மங்கள்‌ தோணவே கரபாத்திரம்‌ கையிலேந்தி தோற்றமுடன்‌ யாசகங்கள்‌ செய்தார்தானே
- அகத்தியர்‌ 12000 / 4 / 428.

தரமான சாத்திரத்தின்‌ கியானரூபம்‌ சதகோடி சூரியர்‌ போல்‌ பிரகாசிக்க கோமானாம்‌ தன்‌ வந்திரிபாலனுக்கு கூறியதோர்‌ மூன்று லட்சம்‌ கிரந்தம்‌ தன்னை சாமானிய மானதொருபதினெண்‌ பேர்கள்‌ சாற்றினார்‌ உபதேசம்‌ பலவாறாக போமேதான்‌ இதிகாசம்‌ கட்டறுத்து புகட்டினார்‌ தன்வந்திரி பாலனுக்கே.
- அகத்தியர்‌ 12000 / 4 / 431

அகத்தியர்‌ 12000 நூலின்படி தன்வந்திரி முற்பிறப்பில்‌ விஷ்ணுவாக இருந்தவர்‌. இப்பிறப்பில்‌ தன்வந்திரி என்ற பெயரில்‌ மனிதனாய்ப்‌ பிறந்துள்ளார்‌. (இக்கூற்று கடவுளாய்‌ இருந்த மகா விஷ்ணு இப்பிறப்பில்‌ தன்வந்திரி என்ற பெயருடன்‌ ஒரு தமிழ்‌ மகனாய்ப் பிறந்துள்ளார்‌ என்பதை உறுதி செய்கிறது) அவருடைய பாட்டன் முப்பாட்டன்மார்களும்‌, தாய்‌ தந்தையரும்‌ காயத்ரி மந்திரத்தையே வாழ்க்கையின் ஆதாரமாகக் கொண்டு தீவிரபக்தர்களாய் எளிமையான வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.அவருடைய தந்தை தம்பூரு வீணையைக்‌ கையில்‌ தாங்கி சிறந்த பக்திப்‌ பாடல்களைப்‌ பாடிக்கொண்டு யாசகம்‌ செய்து குடும்பம்‌ நடத்திவந்தார்‌. (இதிலிருந்து அவர்‌ தந்தை உஞ்சவிருத்தி செய்து வயிறு வளர்த்து வந்த இறைவன்‌ திருவருளுக்குப்‌ பாத்திரரான வைதீகபிராமணர்‌ என்ற உண்மை பெறப்படுகிறது! அவர்‌, சாதாரண மனிதர்களாகப்‌ பிறந்து அஷ்டமா சித்திகளையும்‌ பெற்று ஞானத்தால்‌ உயர்ந்திருந்த பதினெண்‌ சித்தர்களைக்‌ கொண்டு தன்வந்திரிக்கு உபதேசம்‌ செய்வித்து, தன்மகன்‌, உயர்ந்த சித்த சாத்திரங்களையெல்லாம்‌ கற்றுத்‌ தெளிவு பெறச்‌ செய்தார்‌. அதன்‌ விளைவாக தன்வந்திரி இதிகாசங்களில்‌ காணப்படும்‌ அற்புத சித்துக்களையெல்லாம்‌ கடந்து மூன்று லட்சம்‌ கிரந்தங்களையும்‌ கற்றுத் தெளிந்தார்‌. தன்‌ சாத்திர ஞானச்‌ சிறப்பால்‌ நூறு கோடி சூரியர்களுக்கு இணையாக ஞான ஒளி வீசிவந்தார்‌.

ஆயுர்வேதத்தின்‌ தந்தை


இயற்கை மருத்துவத்தின்‌ பிதாமகன் என்று இவர்‌ வருணிக்கப்‌ படுகின்றார்‌. எப்படித்‌ தமிழ்‌ சித்த வைத்திய முறைக்கு அகத்தியார்‌ தந்தையோ, அது போலவே, ஆயுர்வேதத்திற்கு தன்வந்திரி தந்தை ஆவார்‌.
தமிழ்மொழியில்‌ வைத்திய சிந்தாமணி, வைத்திய காவியம்‌,செயநீர்‌-50, முப்பு சூத்திரம்‌ போன்ற பல உயர்ந்த வைத்திய நூல்களை எழுதி ஆயுர்வேதத்தின்‌ தந்தை என்ற தனிச்சிறப்புடன்‌ வாழ்ந்தார்‌.

ஜீவ சமாதி


அவர்‌ நாகை மாவட்டம்‌ வைத்தீஸ்வரன்‌ கோவில்‌ என்ற திருத்தலத்தில்‌ ஜீவ சமாதி பூண்டு இன்றும்‌ வைத்திய நாத சுவாமியாக இருந்து அருளாட்சி செய்து வருகிறார்‌. இத்தலம்‌ நவக்கிரக தோஷப்‌ பரிகாரத் தலங்களுள்‌ செவ்வாய்‌ தோஷப்‌ பரிகாரத்‌ தலமாக விளங்கிவருகிறது.
இத்திருத்தலத்தில்மூலவராக விளங்கும்‌ தன்வந்திரி மகாசித்தரைக்‌ கீழ்க்கண்ட வழிபாட்டுப்‌ பாடலைப்பாடி வணங்கி நாம் யாவரும்‌ உடல்நலமும்‌, மன நலமும்‌ பெற்று பல்லாண்டு காலம்‌ வாழ்ந்து வருவோமாக.

தன்வந்திரி வழிபாட்டுப்‌ பாடல்


விண்ணவரைக்‌ காப்பாற்ற அமுதத்தை ஏந்திவந்தாய்‌ மண்ணவரை வாழ்விக்க ஆயுர்வேதம்‌ தந்தாய்‌ வைத்திய நாதனாக வேளூரில்‌ அருள்‌ புரிவாய்‌ கைகூப்பிதொழும்‌ எமையும்‌ காப்பாய்‌ தன்வந்திரி சித்தே

31/8/18

கருவூர்த்தேவர்‌

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. கருவூராரின்‌ பெற்றோரும்‌ தொழிலும்‌
  3. கருவூரார் வாழ்ந்த காலம்
  4. திருக்குகூரில் நிகழ்ந்தது
  5. கஜேந்திர மோட்சம் என்னும் தல நிகழ்ச்சி
  6. திருநெல்வேலியில்‌ நிகழ்ந்தது
  7. தஞ்சையில் நிகழ்ந்‌தது
  8. திருவரங்கத்தில் நிகழ்ந்‌தது
  9. சிலை செய்து கொடுத்து சிறையில்‌ அடைபடல்‌
  10. கருவூர் சித்தர்‌ சிவத்துடன்‌ கலந்தது
  11. ஜீவ சமாதி
  12. கருவூராரை வழிபடுவோர்‌ கவனத்திற்கு
  13. முடிவுரை


கருவூரார்‌ பிறப்பும்‌ மரபும்‌


சீரான கருவூரார்‌ பிறந்த நேர்மை செப்புகிறேன்‌ செம்பவளவாயால்‌ கேளீர்‌ கூறான சித்திரையாம்‌ மாதமப்பா குறிப்பான அஸ்தமதிரண்டாங்காலாம்‌ தேரான நாள்தனிலே பிறந்தசித்து தேற்றமுடன்‌ கருவூரார்‌ என்னலாமே
- போகர்‌ 7000 / 5890.

மேலே காணும் போகர்‌ கூற்றுப்படி கருவூரார்‌ சித்திரைமாதம்‌ அஸ்த நட்சத்திரம்‌ இரண்டாம் பாதத்தில்‌ கன்னிராசியில்‌ பிறந்தவர்‌.

ஆமேதான்‌ தேவதச்சன்‌ என்று சொல்லி அப்பனேஅவன்‌ மைந்தன்‌ மயன்‌ என்பார்கள்‌. நாமேதான்‌ சொன்னபடி மயனுக்கல்லோ நாடான கருவூராத்‌ பிறந்தாரல்லோ
- போகர்‌ 7000 / 5897

இதன்படி விஸ்வகர்மாவாகிய தேவதச்சனுடைய மகனான மயனின்மைந்தன்‌ கருவூரார்‌ என்கிறார்‌ போகர்‌. சாத்திரங்களின் படி மயன்‌ விண்ணுலகில்‌ பல யுகங்களாக வாழ்ந்து வரும்‌ தேவதச்சன்‌. கருவூரார்‌ இக்கலியுகத்திலே தமிழ்‌ மண்ணில்‌ தச்சர்‌ குலத்தில்‌ பிறந்தவராதலால்‌ அவர்‌ மயனின்‌ மரபில்‌ தோன்றியவர்‌ என்பதே பொருத்தமாகும்‌.
இதே பாடலில்‌ மேலும்‌ போகர்‌
உலோக சிற்பத்தொழிலில்‌ அந்த தேவதச்சனாகய மயன்‌ கூட கருவூராருக்கு இணையாக மாட்டார்
என்கிறார்‌.
கோனான கன்னார ஜாதியாகும்‌ கொற்றவனே நூல்தனிலே கண்டவாறு
- போகர்‌ 7000 / 5705.

என்றபடி கருவூரார்‌ விஸ்வகர்மா மரபில்‌ கன்னார குலத்தில்‌ பிறந்தவர்‌ என்பது உறுதிப்படுகிறது.

கருவூராரின்‌ பெற்றோரும்‌ தொழிலும்‌


அகத்தியர்‌ 12000 / 457 இல்‌ உள்ளபடி கருவூராரின்‌ பெற்றோர்கள்‌ ஊர்‌ ஊராகச்‌ சென்று ஆங்காங்குள்ள கோவில்களுக்கு செம்பு முதலான தாழ்ந்த உலோகங்களில்‌ சிலைகள்‌ செய்து கொடுத்து வாழ்ந்து வந்தனர்‌. அப்படி சம்பாதித்த பொருள்களைக்‌ கொண்டு எட்டு திசைகளிலும்‌ புகழ்‌ பரப்பி வாழும்‌ முனிவர்களுக்கும்‌, சித்தர்களுக்கும்‌ தேவையானவைகளை வாங்கிக் கொடுத்து வந்தார்கள்‌.

பெற்றோர்கள்‌ செய்த புண்ணியம்‌ பிள்ளைகளைச்‌ சேரும்‌ என்ற பழமொழிக்கிணங்க அந்த மெய்ஞ்ஞானிகள்‌ கருவூராருக்கு ஞானப்பால்‌ ஊட்‌டினர்‌. குழந்தைப்‌ பருவத்திலேயே கரூவூரார்‌ மகா சித்தர்களுக்குரிய தகுதிகளுடன்‌ உருவாகி வளர்ந்து வந்தார்‌.
அகத்தியர்‌ 12000 / 454

பெற்றோர்களைப்‌ போல்‌ கருவூராரும்‌ பாரதத்தின்‌ நான்கு திசைகளிலும்‌ உள்ள எண்ணற்ற கோவில்களுக்குச்‌ சென்று அந்தந்தத கோவில்களுக்குத் தேவையான உலோகச் சிலைகளைச் செந்தூரம் சேர்த்து செய்து கொடுத்து வந்தார்‌. அவைகள்‌ யாவும்‌ தங்கச்‌ சிலைகள் போலவே இருந்தன.
அகத்தியர்‌ 12000 / 466

கருவூரார் வாழ்ந்த காலம்


பாடுவேன்‌ பலசந்தங்கள்‌ சிந்ததுவாய்‌ நாடுவேன்‌ இனி நற்குரு பாதத்தை தேடுவேன்‌ இனி சிந்தை மகழ்வொடு கூடுவேன்‌ குரு போகர்தன்‌ பாதமே.
கருவூரார்‌ வாதகாவியம்‌ 700 / 4

இந்தப் பாடலில்‌ கருவூரார்‌ ஆரம்பகாலத்தில்‌ நான்‌ இறைவனை சந்தங்கள் நிறைந்த சிந்து பாடல்கள்‌ பாடி வழிபட்டு வந்திருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட காலத்தில்‌ நான்‌ ஒரு நற்குரு பாதத்தைத்‌ தேடினேன்‌. எனக்கு போகசித்தரே குருவாக அமைந்துவிட்டார்‌. இனி நான்‌ அவர்‌ பாதங்களைப்‌ பணிந்து அவர்‌ வழியில்‌ செல்வேன்‌ என்று கூறுகிறார்‌. இதனால்‌ திருவிசைப்பா பாடிய கருவூராரும்‌ சுமாராக நானூறு ஆண்டுகளுக்குப்‌ பிறகு தஞ்சைப்‌ பிரகதீசுவரர்‌ ஆலயத்தில்‌ லிங்கப்‌ பிரதிஷ்டை செய்த கருவூராரும்‌ காலத்தால்‌ மாறுபட்டிருந்தாலும்‌ ஒருவரே என்பது தெளிவு. தமிழக சித்தர்கள்‌ காயகல்ப முறையைப்‌ பயன்படுத்தி நீண்ட காலம் வாழ்ந்தவர்கள்‌ என்பது தமிழ்‌ உலகம்‌ அறிந்த உண்மை.

காசினியில்‌ யான்‌ கொண்ட கற்பம்‌ கேளாய்‌ கடிதாக நாற்பத்தோர்‌ கற்பமாகும்‌ நேசமுடன்‌ சித்தியாம்‌ கற்பம்‌ கொண்டால்‌ நிலை பெற்றேன்‌ ஆகாச நிலைகள்‌ பெற்றேன்‌.
என்று நொண்டி என்னும்‌ வாதகாவியம்‌ 700 என்ற நூலில்‌ கருவூராரே கூறியுள்ளபடியாலும்‌ அவர்‌ நாற்பத்தொரு கற்பம்‌ வாழ்ந்திருக்கக் கூடும்‌ என்று நம்பமுடிகிறது. இவைகளையெல்லாம்‌ ஒருங்கிணைத்துப் பார்த்தால்‌ கருவூரார்‌ கி.பி.5 ஆம்‌ நூற்றாண்டு முதல்‌ 12 ஆம்‌ நூற்றாண்டின்‌ ஆரம்ப காலம்‌ வரை சுமார்‌ 700 ஆண்டுகள்‌ வாழ்ந்திருக்கிறார்‌ என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.
சைவத்திருமுறைகளில்‌ 9ஆம்‌ திருமுறையில்‌ கருவூரார்‌ பாடி இருப்பதாகக்‌ காணப்படும்‌ பத்து பதிகங்களில்‌ மூன்றாவது பதிகம்‌ நீங்கலாக மற்ற ஒன்பது பதிகங்களின்‌ இறுதியிலும்‌ தன்னைக்‌ கருவூரான்‌, கருவூரானேன்‌ என்றே குறிப்பிட்டுள்ளார்‌. தான்‌ கருவூரில்‌ பிறந்ததாலோ அல்லது வாழ்ந்ததாலோ தன்னைத்‌ தன்‌ ஊரின்‌ பெயரால் வெளிப்படுத்திக் கொண்டர்‌ என்பது இதன்மூலம்‌ தெரிகிறது. இது நம்பியாண்டார்‌ நம்பியின்‌ காலத்திற்கு முற்பட்டநிலை.
சித்தர்‌ ஞானக்‌ கோவையில்‌ வரும்‌ கருவூரார்‌ பூஜாவிதி பாடல்கள்‌ பெரிதும்‌ சித்தர்களின்‌ நிலைகளையே விளக்குகின்றன.இந்த கருவூரார்‌ பூஜாவிதி'யை இயற்றிய பிற்காலத்தில்‌ தன்னை போக முனி அருளால்‌ வந்த பாலன்‌ என்று கூறிக்கொள்வதாலும்‌, தான்‌ நீண்டகாலம்‌ (41 கற்பகாலம்‌) வாழ்ந்ததாகக்‌ கூறியுள்ளதாலும்‌ அவர்‌ போகரின்‌ சீடராகி இந்த நெறியில்‌ உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறார்‌ என்றும்‌ சித்தராக நீண்டகாலம்‌ வாழ்ந்து இருக்கிறார்‌ என்றும்‌ தெரிகிறது.

சித்தர்களின்‌ வாழ்க்கை வரலாறுகளை ஊன்றிப்‌ பார்க்கும்‌ போது இவர்‌ கி.பி.ஐந்தாம்‌ நூற்றாண்டு முதல்‌ 12 ஆம்‌ நூற்றாண்டின்‌ முற்பகுதி -வரை சுமாராக 700 ஆண்டுகள்‌ வாழ்ந்திருக்கிறார்‌. இவர்‌ சித்தராக மாறிய பிறகு எண்ணற்ற அற்புதங்களைச்‌ செய்து முடித்து விட்டு சிவத்துடன் கலந்து விட்டார்.
இனி வருபவை அவர் இயற்றிய அற்புதங்களும் சித்தியும் ஆகும்.

திருக்குகூரில் நிகழ்ந்தது


சித்தன் போக்கு சிவன் போக்கு என்பதற்கு இணங்க கருவூரார் நடந்துகொண்டே பாண்டிய நாட்டின் தாமிரபரணி நதிக் கரையில் உள்ள வைணவத்தலமான திருக்குருகூரை சென்றடைந்தர் அவர் செல்லும்‌ முன்பே திருமால்‌ தன்‌ அடியார்களின்‌ கனவில்‌ தோன்றி சித்தரை எதிர்‌ சென்றழைத்து அவரை நன்‌ முறையில்‌ உபசரிக்கும்படி கட்டளையிட்டார்‌. அதன்படி திருக்குருகூர்‌ வைணவப் பெரியார்களின்‌ உபசரிப்புடன்‌ கருவூரார்‌ திருக்குருகூர்‌ மாலவனை தரிசித்து விட்டுத்‌ தன்‌ திருத்தல யாத்திரையைத்‌ தொடர்ந்தார்‌.

கஜேந்திர மோட்சம் என்னும் தல நிகழ்ச்சி


கஜேந்திர மோட்சத்தை அடைந்தவுடன் அத்தலப் பெருமாளான முன்றீசரை வணங்கிகள் வேண்டும் என்று கேட்டார் முன்றீசர் காளிக்குக் கட்டளையிட காளி ஒரு மது குடத்தை கொண்டு வந்து கொடுத்தாள்‌. தொடர்ந்து அங்கிருந்த கர்ம யோகிகளைப்‌ பார்த்து மீன்‌ கொண்டு வாருங்கள்‌ என்றார்‌.அவர்கள் எங்கு தேடியும்‌ மீன்‌ கிடைக்கவில்லை. உடனே வன்னி மரத்தை நோக்கி மீன்‌ மாரி பொழிக, என அம்மரத்தின்‌ மேலிருந்து ஏராளமான மீன்கள்‌ கொட்டின.அவர்கள்‌ எங்களுக்கு முக்தி அருளவேண்டும்‌ என வேண்ட அவர்களைப்‌ பொதிகை மலைக்கு வரும்படிக்‌ கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு வேறு ஒரு பெருமாள்‌ கோவிலுக்குச்‌ சென்று கோவிலின்‌ முன்‌ நின்று பெருமாளைக்‌ கூவி அழைத்தார்‌. பெருமாள்‌ வராததால்‌ சித்தர்‌ “பெருமாள்‌ இல்லாத இக்‌கோவிலில்‌ பூசையும்‌ இல்லாதிருக்கட்டும்‌' என்று சபித்துவிட்டு திருக்குற்றாலம் சென்று குற்றால நாதரை தரிசித்து விட்டுபொதிகை மலையை அடைந்தார்‌. அங்கு அகத்திய முனிவரை தரிசித்துவிட்டு முன்னரே அங்கு வந்து காத்திருந்த கர்ம யோகிகளுக்கு முக்தியளித்து விட்டுத்‌ திருநெல்வேலியைச்‌ சென்றடைந்தார்‌.

திருநெல்வேலியில்‌ நிகழ்ந்தது


திருநெல்வேலியில்‌ நெல்லையப்பர்‌ கோவிலின்‌ முன்நின்று நெல்லையப்பரை அழைத்தார்‌. அப்போது மூலவருக்கு நைவேத்திய தீபாராதனைகள்‌ நடந்து கொண்டிருந்ததால்‌ உடனே சுவாமி வெளிவரவில்லை. அதனால்‌ வெகுண்ட சித்தர்‌ இங்கு இறைவன்‌ இல்லையா என்று கேட்டுவிட்டு அங்கிருந்து அகன்றார்‌. அதற்குள்‌ கோவில்‌ முழுவதும்‌ எருக்கு முளைத்துப்‌ புதராய்‌ மண்டிவிட்டது. நெல்லையப்பர்‌ சித்தரைத்‌ துரத்திச்‌ சென்று மானூரில்‌ தரிசனம்‌ தந்து மீண்டும்‌ திருநெல்வேலிக்கு அழைத்து வந்தார்‌. கருவூரார்‌ காலடி பட்டதுமே கோயில்‌ வளாகம்‌ முழுவதும்‌ மண்டியிருந்த எருக்கன்‌ செடிகள்‌ மறைந்து கோவில்‌ வளாகமே மலர்வனமாக மாறியது. சித்தர்‌ திருநெல்வேலியிலிருந்து திருவிடை மருதூர்‌ சென்று மகாலிங்ககேஸ்வரரை தரிசித்து விட்டு மேலும்‌பயணத்தைத்‌ தொடர்ந்தார்‌.

தஞ்சையில் நிகழ்ந்‌தது


தஞ்சைப்‌ பெரியகோவிலில்‌ சிவ லிங்கத்தைப்‌ பிரதிஷ்டை செய்ய சிலாசிற்பிகளால்‌ முடியவில்லை. பிரதிஷ்டை செய்வதற்கான மருந்து கெட்டிப்படாமல்‌ இளகிய நிலையிலேயே இருந்தது. அதனால்‌ கோவிலுக்கு குடமுழுக்கு செய்யமுடியாமல்‌ இராஜராஜ சோழ மன்னன்‌ தவித்துக் கொண்டிருந்தான்‌. அப்போது கருவூர்‌ சித்தர்‌ ஒருவரால்தான்‌ இந்த லிங்கப்‌ பிரதிஷ்டை செய்ய முடியும்‌ என்று அசரீரி ஒலித்தது. அப்போது உருமாறி அங்குள்ள கூட்டத்தில்‌ இருந்தபோகநாதர்‌, தஞ்சைப்‌ பெரிய கோவிலுக்கு வா என்று சீட்டெழுதி அதை ஒரு காக்கையின் காலில் கட்டி அனுப்பி கருவூர்த் தேவரை வரவழைத்தார்.அங்கு வந்த கருவூரார்,போகர் முதலியோரின்‌ அனுமதி பெற்று ஆவுடையுடன்‌ சிவலிங்கத்தைச்‌ சேர்த்து நிறுத்தி பந்தனம்‌ செய்து வலிமையாகச்‌ சிவலிங்கப்‌ பிரதிஷ்டை செய்து யாவரையும்‌ மகிழ்வித்தார்‌.
அதைத்தொடர்ந்து பல்லாயிரம் பேருக்கு சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவு முழுவதையும் தாமே உண்டு அனைவரின் வயிரையும் நிரம்புமாறு செய்தார்.

திருவரங்கத்தில் நிகழ்ந்‌தது


தஞ்சையிலிருந்து திருவானைக்கா சென்று ஜம்புலிங்‌கேஸ்வரரை வழிபட்டு திருவரங்கம்‌ சென்றார்‌. அங்கே தாசி கோமளவள்ளி என்ற பொது மடந்தை அவருடைய திவ்யமான உடலழகைக்க்கண்டு அவர் மீது அதிமோகம்‌ கொண்டாள்‌. அவள்‌ தன் விரக நிலையை அவருக்கு உணர்த்தவே அவரும்‌ அதற்கு உடன்பட்டு அவளுடன் இரண்டு நாள் தங்கி அவளை மோகன சிறையில்‌ அடைபட்டு மயங்கி இருக்கச்‌ செய்தார்‌. இரண்டாம்நாள்‌. அதிகாலையில்‌ அரங்க நாதரிடமிருந்து ஒரு இரத்தினமாலையைப்‌ பெற்று அவளுக்குப்‌ பரிசாகக்‌ கொடுத்துவிட்டு விடைபெற்றார்‌. பிரிவாற்றாமையால்‌ வருந்திய அப்பெண்ணிடம்‌ 'வருந்தாதே' நீ நினைக்கும்போதெல்லாம் நான்‌ வந்துவிடுவேன்‌ என்று கூறிவிடைபெற்றுச்‌ சென்றார்‌.
பொழுதுவிடிந்தவுடன்‌ அரங்கநாதர்‌ கழுத்தை அலங்கரித்த இரத்தினமாலையைக்‌ காணாத அர்ச்சகர்‌ அவள்‌ அதை அணிந்திருக்கக்‌ கண்டார்‌. இது உனக்கு யாரால்‌ கொடுக்கப்பட்டது என்று அவளைக்‌ கேட்க அவள்‌ கருவூராரை நினைக்க, அவள்‌ நினைத்த மாத்திரத்தில்‌ கருவூரார்‌ அங்கு பிரசன்னமாகி இதனைத்‌ திருவரங்கன்‌ எனக்குக்‌ கொடுக்க யான்‌ இதை இவளுக்குக்‌ கொடுத்தேன்‌ என்றார்‌. கோவிலார்‌ அதை நம்பாததால்‌ திருமாலே அசரீரியாக ஆகாயத்தில்‌ தோன்றி, இதை யாமே இவருக்குக்‌ கொடுத்தோம்‌ என்று கூறினார்‌. கோவிலார்‌ அனைவரும்‌ சித்தர்பாதம்‌ பணிந்து மன்னிப்பு பெற கருவூர்‌ சித்தர்‌ அவ்விடம்‌ விட்டகன்றார்‌.

சிலை செய்து கொடுத்து சிறையில்‌ அடைபடல்‌


பின்‌ ஒரு சமயம்‌ ஒரு சோழ மன்னன்‌ தன்‌ கனவில்‌ நடராஜரின்‌ திவ்ய தரிசனம்‌ பெற்றான்‌. தான்‌ கனவில்‌ கண்ட அதே சிலையை உண்மையிலேயே செய்து முடிக்க முடிவு செய்தான்‌. உலோக வேலைப்பாட்டில்‌ சிறந்த பல சிற்பிகளை அழைத்து வேண்டிய அளவு பொன்களை அவர்களிடம்‌ கொடுத்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்‌ அச்சிலையைச்‌ செய்து முடிக்கவேண்டும்‌ என்று அரசாணை பிறப்பித்தான்‌.
சிற்பிகள்‌ பொன்னை உருக்கி சிலை செய்ய முயன்றார்கள்‌. பலமுறை முயன்றும்‌ வார்ப்புகள்‌ உடைந்து கொண்டே இருந்தன. மன்னன்‌ வைத்த கெடு முடியும் நாள்‌ வந்துவிட்டது. தங்களால்‌ சிலை செய்ய முடியாததால்‌ தாங்கள்‌ அனைவரும்‌ கழுவேற்றப்படுவது உறுதி என்று முடிவுசெய்து அந்த சிற்பிகள்‌ திக்கற்ற எங்களுக்கு நீயே துணை என்று முடிவு செய்து அந்த சிற்பிகள் திக்கற்ற எங்களுக்கு நீயே துணை என்று இறைவனை வேண்டி மனம்‌ உருகி நின்றனர்‌. அப்போது அங்கே வந்த கருவூரார்‌ நீங்கள்‌ யாவரும்‌ சிறிது நேரம்‌ வெளியில்‌ போய்‌ இருங்கள்‌; நான்‌ சிலையை வார்த்துத்‌ தருகிறேன்‌ என்று கூறி சிற்பிகளை வெளியேற்றிவிட்டு தங்கத்தை உருக்கி அதில்‌ ஒரு துளி செந்தூரத்தைச் சேர்த்து அச்சில் வார்த்தார். அற்புதம்‌ அற்புதம்‌ என்று யாவரும்‌ பாராட்டும்‌ வண்ணம்‌ நடராஜர் சிலை அமைந்திருந்தது.
மறுநாள்‌ காலையில்‌ வந்து சிலையைப்‌ பார்த்த மன்னன்‌ தங்கத்தின்‌ நிறம்‌ குறைந்திருந்ததைக் கண்டு சிற்பிகளைப்‌ பார்த்து தங்கத்தை திருடிக் கொண்டு செம்பால்‌ சிலை செய்து என்னை ஏமாற்றிவிட்டீர்கள்‌ என்று கூற சிற்பிகள்‌ கருவூராரைக்காண்பித்து இந்த யோகிதான்‌ இச்சிலையைச்‌ செய்தார்‌ என்றார்கள்‌. மன்னன்‌ கருவூராரைச்‌ சிறையில்‌ அடைத்தான்‌.

ஏழை சிற்பிகளைக்‌ காக்கும்‌ பொருட்டு சிலைசெய்யக்‌ கருவூராரை அனுப்பிய திருமூலர்‌ ஞானத்தால்‌ நடந்தவற்றை அறிந்து அங்கு வந்து அந்த சோழ மன்னனைப் பார்த்து உனக்கு தங்கம் தானே வேண்டும். நீ கொடுத்த தங்கத்தின் எடைக்கு சமமாக வெள்ளியைக் கொண்டுவா. அதை நீயே உருக்கு என்றார். உருகிய வெள்ளியில்‌ வீசம்‌ (16 இல்‌ ஒரு பங்கு) செந்தூரத்தைச்‌ சேர்த்தார்‌.
அந்தவெள்ளி பத்தரை மாற்றுத்‌ தங்கமாக மாறியது. திருமூலர்‌ உடனே மன்னனைப்‌ பார்த்து சோழ மன்னா! நீ உன்‌ தங்கத்தை எடுத்துக்கொண்டுபோ என்றார்‌.
(இந்தச்‌ செய்தி “கொங்கணவர்‌ வாதகாவியம்‌ 798, 799 ஆம்‌ பாடல்களில்‌ இடம்பெற்றுள்ளது. இப்போதுள்ள தில்லை நடராஜர்‌ சிலையே 11-ம்‌ நூற்றாண்டில்‌ கரூவூர்‌ சித்தர்‌ வார்த்த சிலை என்ற கருத்தும் உள்ளது)

அடுத்து திருமூலர்‌ சோழா! ஆசை என்ற மாய மலையால்‌ நீ மறைக்கப்பட்டுள்ளாய்‌. உன்னால்‌ உண்மையான பரவெளியை உணர முடியவில்லை. உன் ஆசை அகண்டுவிட்டால் உனக்குள் உண்மையான மூலப்பொருள் தெரியும் என்றார்.
இந்தசொற்களால்‌ உள்ஒளி பெற்றசோழ மன்னன்‌ திருமூலரின்‌‌பாதம்‌ பணிந்து அக்கணமே துறவு பூண்டு யோகியானான்‌.
இச்செய்தி கொங்கணவர்‌ வாத காவியம்‌ 803-ஆம்‌ பாடலில்‌ உள்ளது.

கருவூர் சித்தர்‌ சிவத்துடன்‌ கலந்தது


கருவூரார்‌ ஐந்தாம்‌ நூற்றாண்டில்‌ தொடங்கி 12 ஆம்‌ நூற்றாண்டுவரை சுமார்‌ 700 ஆண்டுகள்‌ வாழ்ந்தவர்‌. எனக் கண்டோம்‌. இவற்றில்‌ பன்னிரண்டாம்‌ நூற்றாண்டின்‌ முற்பகுதியில்‌ வாழ்ந்த சைவ சமய வேத பிராமணர்‌ பலர்‌ இவரது உடலழகையும்‌ துறவு வாழ்க்கையையும்‌ பார்த்து இவர்‌ குல ஒழுக்கம்‌ தவறிய வைதீக பிராமணர்‌ என முடிவு செய்து அக்கால சோழ மன்னனிடம்‌ சென்று குல ஒழுக்கம்‌ தவறிய இந்த பிராமணரைத்‌ தண்டிக்க வேண்டும்‌ என்று முறையிட்டனர்‌.சோழ மன்னனும்‌ கருவூராரின்‌ தவக்குடிலுக்குச்‌ சென்று பார்வையிட்டான்‌. அங்கு வைதீக கருமங்களுக்குரிய பொருள்கள்‌ மட்டுமே இருக்கக்‌ கண்டு சித்தரிடம்‌ மன்னிப்பு கேட்டான்‌. கருவூரார்‌ நீங்கள்‌ அந்தப்‌ பிராமணர்களின்‌ வாழ்விடங்களையும்‌ சென்று பாருங்கள்‌ என்றார்‌. அவர்‌ கூறியபடி மன்னன்‌ அவ்விடங்களுக்குச்‌ சென்று பார்க்க அந்தப்‌ பார்ப்பனர்களின்‌ வாழ்விடங்களிலெல்லாம்‌. புலாலும்‌, மீனும்‌, மதுக்‌ குடங்களுமே நிறைந்திருந்தன. அதனால்‌ கோபமுற்ற மன்னன்‌ அந்த வைதீக பிராமணர்கள்‌ அனைவரையும்‌ நாடு கடத்திவிட்டான்‌.
கடைசியில்‌ அவர்கள்‌ தாங்களே கருவூர்‌ சித்தரை ஒழித்து கட்டுவது என்ற முடிவுக்கு வந்தனர்‌. தக்க ஆயுதங்களுடன்‌ சென்று அம்பிரா நதிக்‌ கரையிலிருந்த அவரைத்‌ துரத்தினர்‌. சித்தரும்‌, தான்‌ பூதவுடலைத்‌ துறக்கும்‌ நேரம்‌ வந்துவிட்டதை உணர்ந்தவராய்‌ அருகில்‌ இருந்த பசுபதீஸ்வரர்‌ திருக்கோவிலுள்‌ சென்று மூலவர்‌ லிங்கத்தை கட்டித்தழுவ சோதிமயமாக மாறி சிவலிங்கத்தோடு இரண்டறக் கலந்தார்‌. இந்த வரலாறு கொங்கு மண்டல சதகத்திலும்‌ கருவூரார் பலதிரட்டிலும்‌ இடம்‌ பெற்றுள்ளது.

ஜீவ சமாதி


இவர்‌ கரூர்‌ பசுபதீஸ்வரர்‌ ஆலயத்தில்‌ சமாதிபூண்டும்‌ தஞ்சைப்‌ பெருவுடையார் கோவில்‌ பிரகாரத்தில்‌ தனிக்கோவில்‌ கொண்டும்‌ அருளாட்சி செய்து வருகிறார்‌. வியாழக்கிழமைகளில்‌ இவரை வழிபட்டு வருபவர்கள்‌ வளங்கள்‌ எல்லாம்‌ பெற்று நிறைவுடைய நல்வாழ்வையும்‌ பேரின்பப்‌ பேற்றையும்‌ பெறுவர்‌ என்பது உறுதி.

கருவூராரை வழிபடுவோர்‌ கவனத்திற்கு


கரூர்‌ பசுபதீஸ்வரர்‌ திருக்கோவிலில்‌ தென்புறத்தில்‌ கருவூர்‌ சித்தர்‌ சமாதி உள்ளது. சமாதி மீது கருவூரார்‌ சிலை உள்ளது. இவருக்கு பெளர்ணமிகளில்‌ சிறப்பு பூஜைகள்‌ நடைபெற்று வருகின்றன. இந்தப்‌ பெளர்ணமி பூஜைகளில்‌ கலந்து கொள்பவர்களின்‌ நியாயமான வேண்டுதல்கள்‌ தவறாது நிறைவேறிவருகின்றன.

முடிவுரை


அவர்‌ இயற்றிய கருவூரார்‌ பூஜா விதி என்ற நூலில்‌ அவர்‌ வாலைத் தெய்வத்தை பூசிப்பவர்‌ என்று கூறுகிறார்‌. பொறிபுலன்களைக்‌ கட்டுப்படுத்த புத்தியை ஒரு நிலைப்படுத்தி பூஜை செய்ய வேண்டும்‌ என்கிறார்‌. மெளனத்தின்‌ மேன்மையைப்‌ புலப்படுத்தியுள்ளார்‌. ஆதியினை அறிவதால் பெறும் சிறப்பு, போலி சித்தர்களின்‌ இயல்புகள்‌ ஆகியவற்றையும்‌ விளக்கியுள்ளார்‌.

27/8/18

மகா சித்தர்‌ காகபுசுண்டர்‌

மகா சித்தர்‌ காகபுசுண்டர்‌
பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. காக உருபெற்ற வரலாறு
  3. காக புசுண்டர் பிறப்பு பற்றி போகர் கூறுவது
  4. சாபத்தினால்‌ காகமாக மாறிய புசுண்டர்
  5. இவர்‌ பிறப்பு பற்றி மற்றும்‌ ஒரு கதை
  6. புசுண்டர் பற்றிய பொதுக்‌ கருத்துக்கள்
  7. அவருடைய பிரளயகால அனுபவங்கள்‌
  8. காகபுசுண்டரின் மெய்ஞ்ஞான விளக்கம்
  9. காகபுசுண்டர்‌ சமாதி
  10. சித்தர் வரலாறு கூறுவது
  11. திருக்கோவில் அமைந்துள்ள இடம்
  12. காக புசுண்டர்‌ முக்தி அடைந்த ஆச்சாள்புரம்‌
  13. காக புசுண்டர் சித்தர் காட்சி அருள

முன்னுரை



காணாத காட்சியெல்லாம்‌ கண்ணில்‌ கண்டு
காகமடா புசுண்டரென்று பேரும்‌ பெற்றேன்‌
- காகபுசுண்டர்ஞானம்‌, பாடல்‌ 64

இவ்வாறு புசுண்டர்‌ காகத்தின்‌ வடிவில்‌ இருந்து கொண்டு எண்ணற்ற காட்சிகளைக்‌ கண்டுள்ளதாகக்‌ கூறியுள்ளார்‌. தான்‌ எத்தனையோ யுகங்கள்‌ காகத்தின்‌ உருவில்‌ கல்லால மரத்தில்‌ வாழ்ந்திருந்ததாக வசிஷ்டரிடம்‌ கூறியுள்ளார்‌.

(காகபுஜண்டர்‌ பெருநூல்காவியம்‌பாடல்‌ 3)

காக உருபெற்ற வரலாறு


புசுண்டர்‌ ஆரம்பத்திலிருந்தே காக உருவில்‌ இருந்ததில்லை. ஆரம்பத்தில்‌ மனிதப்‌ பிறவி எடுத்து வாழ்ந்திருக்கிறார்‌. ஒரு பிறவியில்‌ மகாகாலரின்‌ சாபத்தின்‌ விளைவாக விந்திய மலையில்‌ மலைப்பாம்பாகப்‌ பல பிறவிகள்‌ எடுத்து வாழ்ந்திருக்கிறார்‌.

காக புசுண்டர் பிறப்பு பற்றி போகர் கூறுவது


கடைசியாக ஒரு பிராமணச்‌சிறுவனாகப்‌ பிறவி எடுத்தார்‌. வர ரிஷியின்‌ சாபத்தால்‌ சந்திர குலம்‌ விளங்க பங்குனி மாதம்‌ உத்திரம்‌ நட்சத்திரம்‌ 2ஆம் பாதத்தில்‌ (கன்னி ராசியில்‌) ஒரு வெள்ளாட்டியின்‌ மகனாக (விதவையின்‌ மகனாக)ப்‌ பிறந்தார்‌ என்று போகர்‌ கூறுகிறார்‌.

- (போகர்‌ 7000/பாடல்கள்‌ 5888, 5889)

அந்தப்‌ பிறவியில்‌ இராமபக்தி மிக்கவராக இருந்திருக்கிறார்‌. இராமரை நேரில்‌ காண வேண்டும்‌ என்ற ஆசையில்‌ மேரு மலைக்குச் சென்று லோமச முனிவரை அணுகி இப்போது என்‌ உள்ளத்தில்‌ எல்லா ஆசைகளும்‌ அறவே அகன்று விட்டன. இராமனின்‌ திருவடி தரிசனம்‌ பெறும்‌ பேறு கிடைக்காதா என்ற ஆசை மட்டும்‌ என்‌ இதயத்தை விட்டு அகலவில்லை. அந்த ஆசை நிறைவேறும்‌ வழிதேடியே உங்களை நாடி வந்தேன்‌ என்றார்‌. ஆனால்‌ லோமச முனிவரோ பரம்பொருளும்‌ ஆன்மாவும்‌ வேறல்ல. நீரினின்றும்‌ பிரியாத அலைகளைப்‌ போல பரமாத்மாவாகிய பெருங்கடலின் அலைகளாகவே மனித ஆத்மாக்களாகிய நாமும் உள்ளோம் என்று உபதேசம் செய்தார். புசுண்டரோ அந்த பெறுதற்குரிய உபதேசத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. அதனால்‌ மிகவும்‌ கோபமடைந்த லோமச முனிவர்.

சாபத்தினால்‌ காகமாக மாறிய புசுண்டர்


ஏ, பிராமண மூடனே! காகத்தைப்‌ போல்‌ எல்லாவற்றுக்கும்‌ அஞ்சுகிறாய்‌. கூவி அழைத்து உணவு தருபவரைக்கூட கண்டு அஞ்சி ஓடும்‌ காகத்திற்கும்‌ உனக்கும்‌ வேறுபாடில்லை. எனவே நீ காகமாக மாறக்கடவாய்‌ , என்று சாபம் கொடுத்தார்‌. சாபத்தினால்‌ காகமாக மாறிய புசுண்டர்‌ இராமபிரானையே மனதில்‌ நினைத்தபடி விண்ணில் பறந்தார்‌. அவருடைய ஆழ்ந்த இராமபக்தியைப்‌ பாராட்டி லோமச முனிவர்‌ அவருக்கு உன்னதமான இராமமந்திரத்தை உபதேசித்தார்‌. அதுமுதல்‌ புசுண்டர்‌ காகவடிவிலேயே பலயுகங்களாக இராமமந்திர ஜபம்‌ செய்துகொண்டு காகபுஜங்டர்‌ என்ற திருநாமத்தோடு வாழ்ந்து வருகிறார்‌.

இவர்‌ பிறப்பு பற்றி மற்றும்‌ ஒரு கதை:


போகர்‌ கூற்றுக்கு மாறாக புசுண்டரின்‌ பிறப்புப்‌ பற்றி சித்தர்களிடையேவேறு ஒரு கதையும்‌ இருந்து வந்திருக்கிறது.

அதன்‌ விபரம்‌:
ஒரு யுக அந்தத்தில்‌ யானை, ஒட்டகம்‌, கரடி முதலான பல்வேறுபட்ட முகங்களை உடைய சிவ கணங்களுடன்‌ அஷ்ட சக்திகளும்‌ சிவனார்‌ கட்டளைக்கிணங்க மதுவருந்தி நடித்து விழாக்கொண்டாடினர்‌. அவர்களின்‌ வாகனங்களாகிய அன்னங்களும்‌ மது வருந்திக்களித்திருந்தன. ஆதிசக்தியான பிரம்ம சக்தியின்‌ வாகனங்களாகிய பெண்‌ அன்னங்கள்‌ சண்டன்‌ என்னும்‌ வாயசத்தைக்‌ கூடிக்‌ கருத்தரித்து மானதசரசின்‌ கரையில்‌ 2 முட்டைகள்‌ இட்டன. அப்போது பிரம்ம சக்தி தவம்‌ பூண்டு நீண்டகாலம்‌ சமாதியில்‌ இருந்தார்‌. அந்த 21 முட்டைகளிலிருந்து புசுண்டர்‌ முதலான இருபத்தொருவர்‌ வெளிப்பட்டனர்‌. சமாதி கலைந்த பிராமியிடமிருந்து ஞானம்பெற்று அந்த இருபத்து ஒருவரும்‌ தங்கள்‌ தந்தையாகிய சண்டனை அடைந்தனர்‌. சண்டன்‌ அவர்களை மரணமிலா வாழ்வு பெற்று கற்பக மரத்தில்‌ வாழ்ந்திருக்கும்படி செய்தான்‌. பல யுகங்களுக்குப்‌ பிறகு புசுண்டர்‌ நீங்கலாக மற்ற 20 ஞானிகளும்‌ உடலை நீத்து முக்தி அடைந்தனர்‌. புசுண்டர்‌ மட்டும்‌ தன்‌ தேகத்தை காத்து கற்பக நிழலில்‌ வசித்து! வந்தார்‌. அக்காலத்தில்‌ வசிஷ்டர்‌ தமது எட்டாம்‌ பிறப்பில்‌ அவரிடம்‌ வந்து உரையாடினார்‌ என்று ஞான வாசிஷ்டம்‌ கூறுகிறது.புசுண்டர்‌ அன்னத்தின்‌ மூலமாகபிறந்தார்‌ என்பதை சுகப்‌ பிரம்ம மகரிஷி தம்‌ ஞான சூத்திரம்‌ 32 ஆம்‌ பாடலில்‌ உறுதி செய்துள்ளார்‌.

புசுண்டர் பற்றிய பொதுக்‌ கருத்துக்கள்‌:


புசுண்டர்‌ தமிழ்‌ இனத்தைச்‌ சேர்ந்தவர்‌. பல யுகங்கள்‌ வாழ்ந்தவர்‌. சோதிடம்‌ மருத்துவம்‌, யோகம்‌, ஞானம்‌, ஆகிய துறைகளில்‌ நற்றமிழில்‌ எட்டு நூல்கள்‌ இயற்றியுள்ளார்‌. மரணமிலாப்‌ பெருவாழ்வு வாழ்பவர்‌. பிரளயகாலத்தில்‌ அவிட்ட நட்சத்திரப்பதவியில்‌ வாழ்பவர்‌. பிரளயகாலம்‌ முடிந்தவுடன்‌ பூமிக்கு வந்து பிற சித்தர்களுடன்‌ வாழ்பவர்‌. வசிஷ்ட மகரிஷிக்கு. ஞானோபதேசம்செய்தவர்‌.”மாசிலா மனமே மகேசனின்‌ மாளிகை” என்று ஞானப்‌ பாடல்‌ பாடியவர்‌. இவர்‌ உரோமரிஷியின்‌ குருநாதர்‌. இச்செய்தி காகபுசுண்டர்‌ நாடியிலும்‌ வந்திருக்கிறது.

அவருடைய பிரளயகால அனுபவங்கள்‌:


ஒரு பிரளய காலத்தின்‌ முடிவில்‌ பிரம்ம தேவரைப்‌ பார்த்து இருபத்தோராவது பிரம்மாவே வருக! வருக! என்று வரவேற்றாராம்‌.
நான்‌ அறிய சிவன்‌ முப்புரங்களை மூன்று முறை எரித்துள்ளார்‌.
தட்சன்‌ யாகத்தை இருமுறை அழித்துள்ளார்‌.
திருமால்‌, இராமன்‌ என்னும்‌ பெயரில்‌ பதினோராவது முறையாக இப்போது பிறக்க விருக்கிறார். அவரே சிலகாலம்‌ கழித்து வாசுதேவன் இல்லத்தில்‌ கிருஷ்ணனாக பதினாறாவது முறையாக அவதரிக்க உள்ளார்
என்று தான் பார்த்து வரும் யுக மாற்றங்களைப் பற்றிக் கூறியுள்ளார்.

காகபுசுண்டரின் மெய்ஞ்ஞான விளக்கம்


காகபுசுண்டர்‌ அண்டத்தின்‌ உச்சியில்‌ மனதைச்‌ செலுத்தி கற்பகோடி காலங்கள்‌ வாழ்ந்தவர்‌. இதுவரை ஏழு லட்சம்‌ பிரளயங்கள்‌ வந்துள்ளன என்று உலகத்தோற்ற ஒடுக்கம்‌ பற்றி கேட்ட சிவனாருக்கு உண்மை நிலையைப்‌ புரிய வைத்தவர்‌. “ஆதி என்ற சித்தருக்கும்‌ ஆதியாக இருந்தமையால்‌ சிவனார்‌ கயிலையில்‌ இருக்கும்படி கூற அதன்படி காக உருவத்தில்‌ கைலையில்‌ இருந்தவர்‌.

மும்மூர்த்திகளின்‌ ஏழு பிறப்புகளையும்‌ தான்‌ வாழும்‌ காலத்திலேயே கண்டவர்‌. பிறப்பு இறப்புகளைக்‌ கடந்தவர்‌. காக வடிவுடன்‌ இருந்துகொண்டு காரண காரியங்களுக்கும்‌ உரிய மூலத்தைக்‌ கண்டவர்‌”
“(காகபுசுண்டர்‌ ஞானம்‌ - பாடல்கள்‌ 4, 8, 49, 50)
யாகோபு வைத்திய வாத சூத்திரம்‌ 400 என்ற நூலில்‌ மேற்கண்ட வரலாற்று நிகழ்ச்சிகளை காகபுசுண்டர்‌ கூற தாமே நேரில் கேட்டதாக இராம தேவர்‌ கூறியுள்ளார்‌.
காகபுசுண்டர்‌ மேலே கண்டதம்‌ மெய்ஞ்ஞான விளக்க நூலில்‌ மெளனத்தின்‌ மேன்மை, சமாதி முறைகள்‌, பிரம்மத்தை அடைதல்‌, வாசியோகம்‌, காயகல்பமுறை ஆகியவற்றையும்‌ விளக்கிக்‌ கூறியுள்ளார்‌. அவர்‌ மெய்ஞ்ஞான விளக்கத்துடன்‌ வேறு பல நூல்களும்‌ எழுதியுள்ளார்‌. உபநிடதம்‌ தத்துவ உண்மைகளை விளக்கும்‌ நூல்‌. ஞானக்‌ குறள்‌ ஆன்மா பிரம்மத்‌துடன்‌ கலக்கும்‌ நிலையை உணர்த்துகிறது.

காகபுசுண்டர்‌ சமாதி (தென்‌ பொன்பரப்பி)


காகபுசுண்டரும்‌ அவர்‌ மனைவி பகுளாதேவியும்‌ கள்ளக்குறிச்சி மாவட்டம்‌ தென்பொன்பரப்பி கிராமத்தில்‌ உள்ள சுவர்ணாம்பிகை உடனுறை சுவர்ணபுரீஸ்வரர்‌ ஆலயத்தின்‌ பக்கத்தில்‌, கோவிலின்‌ ஈசான்ய மூலையில்‌ சமாதி கொண்டுள்ளனர்‌.

ஸ்வர்ணபுரீஸ்வரர்‌ கோவிலின்‌ சிவலிங்கம்‌ காக புசுண்டராலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிவலிங்கம்‌ ஐந்தரை அடி உயரத்திற்குக்‌ காந்தத்‌ தன்மை கொண்ட ஒரே அடி கல்லினால்‌ ஆனது. இந்த லிங்க அமைப்பு நவபாஷாணக்‌ கட்டமைப்புக்கு ஒப்பானது. இந்த விங்கத்தைக்‌ கைகளால்‌ தட்டிப்‌ பார்த்தால்‌ (வெண்கலச் சத்தம் வரும்) அடிபீடமான பிரம்மபாகம்‌, மத்தியபாகமான விஷ்ணு பீடம்‌, மேலே உள்ள ருத்ர பாகமான சிவலிங்கம்‌ ஆகிய மூன்று பகுதிகளுமே பதினாறு முகங்களைக்‌ கொண்டவை.

சித்தர் வரலாறு கூறுவது


சிவதரிசனம்‌ பெற காகபுசுண்டர்‌ இங்கு 16 ஆண்டுகள்‌ கடுந்தவம்‌ புரிந்தார்‌. அக்கால முடிவில்‌ ஒரு நாள்‌ பிரதோஷ காலத்தில்‌ சிவபெருமான்‌ 16 முகங்களைக்‌ கொண்ட சிவலிங்க மாகக்‌ காட்சி கொடுத்தார்‌. அதன்‌ நினைவாகவே புசுண்டர்‌ இங்கு இந்த ஷோடசலிங்கத்தைப்‌ பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்ததாகவும்‌ இப்போது கோவில்‌ அமைந்துள்ள அந்த இடத்திலேயே அவர்‌ ஜீவ சமாதி அடைந்துள்ளதாகவும்‌ சித்தர்‌ வரலாறு கூறுகிறது. அவர்‌ சமாதி அடைந்த சிறிது காலத்திற்குப்‌ பிறகு கி. பி. ஏழாம்‌ நூற்றாண்டில்‌ பொன்பரப்பியை ஆண்ட மன்னனாகிய 'வானகோவராயம்‌ அங்கு ஆலயத்தை எழுப்பினான்‌.
இந்த ஆலயம்‌ சித்தர்‌ நெறி அடிப்படையில்‌ பல்வேறு தனிச்சிறப்புகளைக்‌ கொண்டது. இங்குள்ள சிவலிங்கம்‌ சிறிது காலம்‌ ஆழ்ந்து வழிபட்டாலே பக்தர்களை தியான நிலைக்குக்‌ 'கொண்டுசெல்லவல்லது.
சிவலிங்கம்‌ அமைந்துள்ள கருவறை எப்போதும்‌ உக்கிரமாகவே உள்ளது. கருவறையில்‌ எரிந்து கொண்டிருக்கும்‌ தீபம்‌ இடைவிடாது துடித்துக்‌ கொண்டே இருக்கும்‌. இதுபற்றிய விளக்கம்‌ காகபுசுண்டர்‌ நாடியிலும்‌ உள்ளது. இது தென்‌ தமிழ்நாட்டின்‌ பஞ்ச பூதத்‌ தலங்களில்‌ வாயுத்தலமாகும்‌.
இக்கோவிலில்‌ உள்ள நந்தி இளங்கன்றுபோலவும்‌ சிவலிங்கத்திற்கு நேர்‌ எதிரில்‌ சிவனையே பார்த்துக்‌ கொண்டிருப்பது போலவும்‌ அமைந்துள்ளது. இந்த நந்தி- லிங்க ஒருங்கிணைப்பு ஜீவ சமாதி அடைந்துள்ள சித்தர்களின்‌ வாசி ஓட்டத்தை நுட்பமாக உணர்த்தும்‌ வண்ணம்‌ உள்ளது. இந்த நந்தீஸ்வரருக்கு அபிஷேகம்‌ செய்யும்போது அபிஷேகப்‌ பொருட்கள்‌ யாவுமே நீல நிறமாக மாறி காட்சி அளிப்பது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்‌.

திருக்கோவில் அமைந்துள்ள இடம்


இத்திருக்கோயில்‌ சென்னை - சேலம்‌ நெடுஞ்சாலையில்‌, ஆத்தூர்‌ - கள்ளக்குறிச்சி வழித்தடத்தில்‌ அம்மையகரம்‌ பேருந்து நிலையத்திலிருந்து மேற்கே ஒரு கி.மீ தொலைவிலுள்ளது.

காகபுசுண்டர்‌ முக்தி அடைந்த ஆச்சாள்புரம்‌


கயிலைநாதரின்‌ ஆணையின்படி காக புசுண்டர்‌ ஆச்சாள்புரம்‌ வந்து 'திருவெண்ணீற்று உமையம்மை உடனுறை சிவலோக தியாகராஜர்‌ திருக்கோவிலை அடைந்து அந்தக்கோவிலினுள்‌ நிருதி திக்கில்‌ அமர்ந்து தவமியற்றி வந்தார்‌. திருஞான சம்பந்தர்‌ திருமண நாளான வைகாசி மாதம்மூல நட்சத்திரத்தன்று வெளிப்பட்ட சிவ ஜோதியில்‌ திருமணத்திற்கு வந்திருந்த எல்லா சிவ பக்தர்களுடனும்‌ சேர்ந்த காகபுசுண்டரும்‌ முக்தி அடைந்தார்‌.

இத்திருக்கோவிலில்‌ காக புசுண்டர்‌ காகத்தின்‌ முகமும்‌ ஜடாமுடியும்‌ கொண்டு தவயோகத்தில்‌ பத்மாசனத்தில்‌ அமர்ந்த நிலையில்‌ இருந்து இன்றும்‌ காட்சியளித்தவண்ணம்‌ அருளாட்சி செய்து வருகிறார்‌. (இந்தத்‌ திருத்தலம்‌ சீர்காழியிலிருந்து மகேந்திரப்‌ பள்ளி செல்லும்‌ வழியில் 13 கி.மீ. தூரத்திலும்‌ சிதம்பரத்திலிருந்து 12 கி.மீ தூரத்திலும்‌ உள்ளது)

அவர்‌ தம்‌ ஞானப்படலில்‌


மாசிலாமனமே மகேசனின்‌ மாளிகை
என்று கூறியுள்ளதற்‌கிணங்க நாமும்‌ களங்கமில்லா பளிங்கு போன்று தெளிந்த மனநிலையில்‌ அவரை பக்தியுடன்‌ அழைத்தால்‌ இந்தத்‌ தலைமை சித்தர்‌ நம்முடைய ஞானக்கண்ணிலும்‌ (ஆக்ஞைமையத்திலும்‌) காட்சி கொடுத்தருள்வார்‌ என்பது சத்தியத்திலும் சத்தியம்‌.ஓம்தத்சத்‌.
ஒம்தத்சத்‌.

20/8/18

வன்மீக சித்தரின்‌ வாழ்வும்‌ வாக்கும்‌

பொருளடக்கம்
  1. வாழ்க்கை
  2. திருவான்மியூர்
  3. வன்மீகரின் முற்றறிவு
  4. விஞ்ஞானப் பார்வையில் சித்தனின் பார்வையின் தொலைநோக்கு
  5. சித்தன்‌ யார்‌?
  6. நம்பாதீர்கள்
  7. சமாதிகூடிய இடம்‌

வாழ்வு


வன்மீக சித்தர்‌ பதினெண்‌ சித்தர்களில்‌ முதல்‌ சித்தர்‌. அவர்‌ கலியுகம்‌ ஆரம்பிக்கும்‌ முன்பிருந்தே தமிழகத்தில்‌ வாழ்ந்து வந்தவர்‌: கலியுகத்தில்‌ சித்தர்கள்‌ காலத்தொடக்கமான கி. பி. ஐந்தாம்‌ நுற்றாண்டுவரை, எழுநூறு ஆண்டுகளுக்கு மேல்‌ வாழ்ந்திருக்கிறார்‌.