Top bar Ad

21/2/20

ஓம் நம சிவாய சித்தர் பாடல் மருந்தீஸ்வரர் ஆலயம்


ஓம் நம சிவாய

சித்தர் பாடல்!
மருந்தீஸ்வரர் கோவிலில் பாடப்படும் “ஓம் நம சிவாய” சித்தர் பாடல்!
திருவான்மியூரில் அமைந்துள்ள மருந்தீஸ்வரர் ஆலயத்தில் சித்தரால் சிவன் சன்னதி முன் அமர்ந்து தினமும் இரவு பாடப்பட்ட பாடலை இன்றும் சிவ பக்தர்கள் கடைபிடித்து பாடி வருகிறார்கள்! அனைவரின் குரலும் சற்றும் பிறழாது பக்தியுடன் ஓங்கி ஒலிப்பது கேட்கும் நமக்கும் அவர்களுடன் சேர்ந்து பாட வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது!

பாடல் வரிகள் :

ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்காள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துக் கொண்டபின் என்னிலே இருந்த ஒன்றை யான் கானவல்லரோ என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டனே
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம் ஈனதேது ராம ராம ராம ராம வென்ற நாமமே
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
அஞ்சேழுத்திலே பிறந்து அஞ்சேழுத்திலே வளர்ந்து அஞ்சேழுத்தை ஓதுகின்ற பஞ்ச பூத பாவிகாள் அஞ்சேழுத்திலோர் எழுத்து அறிந்து கூற வல்லீறேல் அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூலமானமுழு எடுத்த பாதம் நீள் முடி எண்திசைக்கும் அப்புறம் உடல் கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றைமேவி நின்றதல்ல மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல அரியதாகி நின்ற நேர்மை யாவர்காண வல்லரோ
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
மண்கலங் கவிழ்ந்த போது வைத்து அடுக்குவார் வெண்கலங் கவிழ்ந்த போது வேணுமென்று பேணுவார் நண்கலங் கவிழ்ந்த போது நாறுமென்று போடுவார் எண்கலந்து நின்றமாயம் என்ன மாய மீசனே
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஆனவஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆனவஞ் செழுத்துளே ஆதியான மூவரும் ஆனவஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும் ஆனவஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக