3/2/19

அத்திசுர லக்ஷ்ணம்‌

அத்தி சுரத்தின்‌ குணஞ்சொல்லி லறவே வெதுப்பு முடம்பெல்லாம்‌ மெத்திக்‌ கலங்கு முள்ளலையும்‌ வெள்ளோக்காளம்‌ போக்கி விக்கும்‌ சத்திகெடாது நீர்சிவக்கும்‌ தம்பம்போலே கடத்திவிடும்‌ வத்தி வலிக்கும்‌ வயிறிழியா வண்ணமதாகு குணந்தானே.

உடம்பில்‌ எரிச்சல்‌ அதிகமாகும்‌. மனம்‌ கலங்கும்‌. வெள்ளோக்காளமெடுக்கம்‌, சிறுநீர்‌ சிவந்து இறங்கும்‌. கட்டைபோல்‌ கிடப்பான்‌. உடம்பில்‌ வலியும்‌ உண்டாகும்‌. மலம்‌ போகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக