13/12/18

கபச்சுர லக்ஷ்ணம்‌

வாந்தியாய்‌ மூக்குநீர்பாய்‌ வைத்துள விரத்தஞ்சீதந் போந்தநெஞ்‌ செரிப்புக்‌ காருதல்‌ புகல்திமிர்‌ சுவாசகாசம்‌ சே(ர்)ந்தவுட்‌ டிணமேவேண்டல்‌ சிலிர்த்‌துடல்‌ வெளுத்‌ துமேனி காந்தளென்‌ கறத்துமாதே கபச்சுர ரோகிதானே.

சுரத்துடன்‌ வாந்தி, ஜலதோஷம்‌, சீதபேதி, நெஞ்சுக்கரிப்பு, உடம்பில்‌ மதமதப்பு, மேல்மூச்சுடன்‌ இருமல்‌, உஷ்ணமான பதார்த்தத்தில்‌ விருப்பம்‌, உடம்பு வெண்ணிறமடைதல்‌ முதலான குறிகளேற்படில்‌ கபசுரமாகும்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக