30/11/18

மலப் பரீக்ஷை

மலக்குறி வாதரோக மலமெத்தக் கருக்கும்‌ பித்தங்‌ கலக்கவே பசுக்குமல்லால்ச்‌ சிவப்போடு காணுஞ்‌ சிலேத்மம்‌ பெலக்கவே வெண்மை யாகுமல்‌ லது சீதமபேருந் துலக்கிய தொந்தரோகம்‌ பலவிதந்‌ தோணுமாதே.

வாதம்‌ அதிகரித்தால்‌ மலம்‌ கறுக்கும்‌. பித்தம்‌ பிரகோபித்தால்‌ பச்சை நிறமாகவோ அல்லது சிவப்பு நிறமாகவோ மலம்‌ வெளியாகும்‌. கபம்‌ அதிகமானால்‌ மலம்‌ வெண்ணிறமாக இருக்கும்‌. பலவித நிறமாக இருந்தால்‌ அந்த தோஷத்தின்‌ குறிகளும்‌ இருக்கும்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக