18/11/18

கப நாடிகளின்‌ மரணக்குறி

ஐயமாஞ்‌ சிலேத்‌துமத்துக்‌ காகிய நாடிதானுந் தொய்யவே தவளைபோலத்‌ தொங்கியே குதித்திட்டாலும்‌ பையவே புரண்டிழுத்‌துப்‌ பாம்பென நடைகொண்டாலு மையணி குழலினாளே மரணமென்‌ றுரைக்கலாமே.

கபநாடிக்குண்டான இயல்பின்‌ படி, அது தவளை போல்‌ தத்தித்‌ தத்திக்‌ குதித்தாலும்‌, புரண்டு இழுத்‌துப்‌ பாம்பைப் போல்‌ நெளிந்து சென்றாலும்‌ ரோகி மரணமடைவான்‌ என்று சொல்லவும்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக