16/10/18

சித்த மருத்துவம் - முன்னுரை

பண்டைக்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் பல அரிய மருத்துவ முறைகளை தமது அனுபவத்தின் மூலம் தெரிந்து ஓலைச் சுவடிகளில் பொறித்து வழங்கியுள்ளனர். அத்தகைய நூலில் பற்ப வகைகள், செந்தூர வகைகள், லேகிய வகைகள், சூரண வகைகள், எண்ணெய் வகைகளும் அவற்றின் செய்முறைகளும் கூறப்பட்டுள்ளன. இந்த வெளியீட்டில்‌, நமது புராதன வைத்திய நூல்‌கள், அகத்தியர்‌ முதலிய மஹரிஷிகளாலும்‌, போகர்‌, கொங்கணர்‌ முதலிய பல சித்தர்களாலும்‌, தமிழில்‌ ஏராளமான வைத்திய நூல்கள்‌ எழுதப்பட்டு, தற்காலத்தில்‌ பலராலும்‌ வாசித்துக்‌ கையாளப்பட்டு வருகின்‌றன, ஆனால்‌ நம்‌ தமிழ்‌நாட்டில்‌, சுமார்‌ 600, 700 வருடங்களுக்கு முன்‌ ஏற்பட்ட கலவரத்தில்‌, நமது தமிழ்‌ நூல்களும்‌ சமஸ்கிருத நூல்களும்‌ அழிந்‌துபோயின. அவைகளில்‌ எஞ்சியவைகளே, பிற்காலத்தில்‌ நம்‌ நாட்டில்‌ மூலைமுடுக்குகளிலிருந்து சேகரிக்கப்பட்டு, நூல் வடிவமாக்குப்பட்டு பிரசாரத்தில்‌ இருந்து வருகின்றன. நூல்கள்‌ பல சிதைந்து போய்‌, பலரிடங்களிலிருந்து சேர்க்கப்பட்ட காரணத்தினால்‌, எந்த நூலும்‌ கோர்வையாக முதல்‌ இடை கடை அதனதன்‌ இடத்தில்‌ அகப்படவுமில்லை சேர்க்கப்படவுமில்லை. இந்தக்‌ காரணத்‌தைக் கொண்டே அகப்பட்ட பாடல்களைச்‌ சேர்த்து, அதற்குத்‌ தகுதியான பெயர்‌ வைக்க முடியாமல்‌, நூலாசிரியரின்‌ பெயரையும்‌, பாடல்களின்‌ எண்ணிக்கையையும்‌ சேர்த்து அகத்தியர்‌ 10000, அகத்தியர் ‌4000, அகத்தியர் ‌1500, கொங்கணர்‌ முதல்காண்டம்‌ 1000, நடுக்காண்டம்‌ 1000, கடைக்‌காண்டம்‌ 1000, போகர்‌ 700 என்ற பெயரால்‌ இத்தொகுதிகளுக்கு நாமகரணம்‌ செய்தனர்‌. இந்தத்‌ தொகுதி நூல்களில் தொடர்ந்தாற் போல்‌ எந்த விஷயமும்‌ சொல்லப்படவில்லை. ஓரிடத்தில்‌ மருந்து முறையும்‌, அடுத்தாற் போல்‌ ஓர்‌ யோக முறையும்‌, அதற்கடுத்தபடி ஓர்‌ வியாதியின்‌ குணா குணங்களும்‌, அதன் பிறகு வச்யம் முதலிய மந்திரங்களும்‌ சேர்க்கப்பட்டிருக்கன்‌றன,

2 கருத்துகள்: