திருவாதிரை நட்சத்திர நாயகனான திருக்கயிலாயபதி பூமியை சமன்படுத்துவதற்காக பூமியின் தென் முனைக்கு அகத்தியரை அனுப்பி வைத்தார் என்பது புராணக்கதை. உண்மையில் சிவப்பரம்பொருள் பூமிக்கு வடக்கே துவாதச பால்வெளி மண்டலத்திற்கு அப்பால் வெகு தொலைவில் துருவ நட்சத்திரமாய் இருந்து பூமியில் வாழும் மக்களுக்குத் திசைகளை உணர்த்தி வழிகாட்டுகிறது. துருவ நட்சத்திரம் உள்ள வடக்கு திசையைத் துல்லியமாக அறிந்துணர புலகர், கீரது, அத்திரி, புலத்தியர்,ஆங்கிரசர், வசிஷ்டர், மரீசி ஆகிய சப்தரிஷிகளும் உலக மக்கள் எளிதில் பார்க்கும் வகையில் சப்தரிஷி மண்டலமாக அமைந்திருந்து வட பாகத்தை சிவப்பரம்பொருளான துருவ நட்சத்திரம் உள்ள திசையை காண்பித்து வருகிறார்கள். துருவ நட்சத்திரம் பூமிக்கு பாதுகாப்பாக அகத்தியரும், பூமிக்கு தெற்கே வெகு தொலைவில் நாம் வாழும் பால்வழி மண்டலத்திலேயே மிக அதிகமாக ஒளி மிக்க நட்சத்திரமாக இருந்து பூமியின் சமன்பாட்டை பாதுகாத்து வருகிறார்.
பயனுள்ள தகவல்.தங்கள் முயற்சிக்கு எமது வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி 🙏🙏🙏
பதிலளிநீக்கு